ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம்!

Published:

perarivalan - 2026

புது தில்லி: பேரறிவாளன், முருகன் உள்பட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்ய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

ராஜிவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு முழு அதிகாரம் உண்டு. அவர்கள் 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம்.

06 July17 Supreme Court - 2026

எனவே, 2016 இல் தங்களை விடுவிக்கக் கோரி சம்பந்தப் பட்டவர்களால் அளிக்கப் பட்ட மனு குறித்து ஆளுநர் முடிவெடுக்கலாம் எனக் கூறி மத்திய அரசின் மனுவை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

தமிழகத்தில் இன்று பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப் பட்டது இந்த விவகாரம் என்பது குறிப்பிடத் தக்கது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img