தெலங்கானா சட்டசபை கலைப்பு: ஆளுநருக்கு பரிந்துரைத்தார் முதல்வர் ராவ்!

chandrasekara rao - 2026

ஹைதராபாத் : தெலங்கானா சட்டசபையைக் கலைக்க மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டது. இதை அடுத்து, சட்டசபையைக் கலைப்பது தொடர்பான பரிந்துரையை ஆளுநருக்கு முதல்வர் அனுப்பி வைத்தார்.

மாநிலத்தில் நிலவும் பிரச்னைகள், விரைவில் வெற்றி வாய்ப்புடன் தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட காரணங்களுக்காக தெலங்கானா சட்டசபையைக் கலைக்க முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.

அமைச்சரவையின் பரிந்துரையை முதல்வர் சந்திரசேகர ராவ், ஆளுநர் நரசிம்மனிடம் நேரில் சென்று அளித்தார். இதனை ஏற்ற ஆளுநர், புது அரசு அமையும் வரை தற்காலிக அரசாக நீடிக்குமாறு சந்திரசேகர ராவிடம் கேட்டுக் கொண்டார்.

2019 ஏப்ரல் வரையில் தற்போதைய சந்திரசேகர ராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆட்சி பதவிக் காலம் உள்ளது. ஆனால், முன்கூட்டியே தேர்தல் நடத்த சந்திரசேகர ராவ் கோரிக்கை வைத்தார். மாநில பிரச்னையை முன்வைத்தும் எதிர்க்கட்சிகள் குறிப்பிட்ட அவகாசத்துக்குள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து விடக் கூடாது என்பதிலும் குறிப்பாக இருந்த ராவ், தேர்தலை முன்கூட்டியே சந்திக்க திட்டமிட்டார்.

அதன்படி, தெலங்கானா அரசைக் கலைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால், சட்டீஸ்கர், ம.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தப் படும் போது, தெலங்கானாவிற்கும் நடத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories