சுய சிந்தனையுடன் செயல்படும் பிரதமரை சோனியா விரும்பவில்லை: சரத் பவார்

மும்பை :

சுய சிந்தனையுடன் செயல்படும் ஒருவர் காங்கிரஸ் சார்பில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை சோனியா குடும்பம் விரும்பவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தனது 75-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதை ஒட்டி, அவர் எழுதிய “’Life on my terms-From the Grassroots and Corridors of Power.” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

அந்த புத்தகத்தில், ‘சுய சிந்தனையுடன் செயல்படும் ஒருவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை சோனியா குடும்பம் விரும்பவில்லை. நேரு குடும்ப விசுவாசிகள், எனக்குப் பதிலாக பி.வி. நரசிம்மராவை பிரதமராகத் தேர்ந்தெடுக்க சோனியாவுக்கு ஆலோசனை வழங்கினர்.

ராஜீவ் மறைவுக்குப் பிறகு, மகாராஷ்டிர காங்கிரஸில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் எனது பெயர் பிரதமர் பதவிக்கு ஆலோசிக்கப்பட்டது. ஆனால், சோனியா வீட்டில்தான் அம்முடிவு எடுக்கப்படும் என்பதால் நான் தனிப்பட்ட முறையில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தேன். மூத்த தலைவராக இருந்தாலும் பி.வி. நரசிம்மராவ் உடல் நலம் காரணமாக தீவிர அரசியலில் இருந்து தேர்தலுக்கு முன்பே ஒதுங்கியிருந்தார். ராஜீவ் காந்தி இல்லாத நிலையில் நரசிம்ம ராவின் நீண்ட அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, அவரை மீண்டும் அழைத்து வர ஆலோசிக்கப்பட்டது.

நேரு குடும்ப விசுவாசிகள் நடத்திய அந்தரங்க ஆலோசனையில், சரத் பவார் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது சோனியா குடும்பத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நீண்ட காலத்துக்கு கடிவாளம் அவர் கையில் இருக்கும் நேரிடும் என விவாதித்தனர். அவர்களில் எம்.எல். போடேடர், ஆர்.கே. தவண், அர்ஜுன் சிங், வி. ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.

நரசிம்ம ராவை மீண்டும் கொண்டு வருவது நல்லது. ஏனெனில் அவருக்கு வயதாகி விட்டது. அத்துடன் உடல் நலக் குறைவுடன் உள்ளார் என சோனியாவை சம்மதிக்க வைத்தனர். நரசிம்ம ராவுக்குப் பிறகு, விரைவிலேயே பிரதமர் பதவியைக் கைப்பற்றலாம் என அர்ஜுன் சிங் நம்பினார். எனினும், 1991-ல் ராவை மீண்டும் தீவிர அரசியலுக்கு அழைத்து வரும் சோனியாவின் முடிவு எனக்கு எதிராகத் திரும்பியது. -என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories