December 5, 2025, 7:01 PM
26.7 C
Chennai

சுய சிந்தனையுடன் செயல்படும் பிரதமரை சோனியா விரும்பவில்லை: சரத் பவார்

மும்பை :

சுய சிந்தனையுடன் செயல்படும் ஒருவர் காங்கிரஸ் சார்பில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை சோனியா குடும்பம் விரும்பவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தனது 75-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதை ஒட்டி, அவர் எழுதிய “’Life on my terms-From the Grassroots and Corridors of Power.” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

அந்த புத்தகத்தில், ‘சுய சிந்தனையுடன் செயல்படும் ஒருவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை சோனியா குடும்பம் விரும்பவில்லை. நேரு குடும்ப விசுவாசிகள், எனக்குப் பதிலாக பி.வி. நரசிம்மராவை பிரதமராகத் தேர்ந்தெடுக்க சோனியாவுக்கு ஆலோசனை வழங்கினர்.

ராஜீவ் மறைவுக்குப் பிறகு, மகாராஷ்டிர காங்கிரஸில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் எனது பெயர் பிரதமர் பதவிக்கு ஆலோசிக்கப்பட்டது. ஆனால், சோனியா வீட்டில்தான் அம்முடிவு எடுக்கப்படும் என்பதால் நான் தனிப்பட்ட முறையில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தேன். மூத்த தலைவராக இருந்தாலும் பி.வி. நரசிம்மராவ் உடல் நலம் காரணமாக தீவிர அரசியலில் இருந்து தேர்தலுக்கு முன்பே ஒதுங்கியிருந்தார். ராஜீவ் காந்தி இல்லாத நிலையில் நரசிம்ம ராவின் நீண்ட அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, அவரை மீண்டும் அழைத்து வர ஆலோசிக்கப்பட்டது.

நேரு குடும்ப விசுவாசிகள் நடத்திய அந்தரங்க ஆலோசனையில், சரத் பவார் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது சோனியா குடும்பத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நீண்ட காலத்துக்கு கடிவாளம் அவர் கையில் இருக்கும் நேரிடும் என விவாதித்தனர். அவர்களில் எம்.எல். போடேடர், ஆர்.கே. தவண், அர்ஜுன் சிங், வி. ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.

நரசிம்ம ராவை மீண்டும் கொண்டு வருவது நல்லது. ஏனெனில் அவருக்கு வயதாகி விட்டது. அத்துடன் உடல் நலக் குறைவுடன் உள்ளார் என சோனியாவை சம்மதிக்க வைத்தனர். நரசிம்ம ராவுக்குப் பிறகு, விரைவிலேயே பிரதமர் பதவியைக் கைப்பற்றலாம் என அர்ஜுன் சிங் நம்பினார். எனினும், 1991-ல் ராவை மீண்டும் தீவிர அரசியலுக்கு அழைத்து வரும் சோனியாவின் முடிவு எனக்கு எதிராகத் திரும்பியது. -என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories