அதிர்ச்சிகரமான ரயில் விபத்து; காரணம் செல்ஃபி மோகம்: விபத்துக்கு பிறகும் செல்ஃபி!

Published:

amritsar train accident punjab 19 October 18 - 2026

அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தசரா கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற ரயில் விபத்துக்கு செல்ஃபி மோகமே காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமிர்தசரசில் தசரா கொண்டாட்டத்தின் போது ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த ரயில் மோதியது. இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. 50 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்தக் கோர விபத்துக்கு மக்களின் செல்பி மோகமே காரணம் என தெரிய வந்துள்ளது.

தசரா கொண்டாட்டத்தில் ராவணனின் உருவ பொம்பை எரிக்கப்பட்ட போது, ரயில் வருவதை கண்டு கொள்ளாமல் ஏராளமானோர் தண்டவாளத்தின் மீது நின்று அதனை தங்களின் மொபைல் போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். ஏராளமானோர் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர்.

இவையெல்லாம், இந்த ரயில் விபத்து நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளில் பதிவாகி உள்ளது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது ரயில் மோதி விட்டுச் சென்ற பிறகும் பலர் எவ்வித பதற்றமும் இன்றி தொடர்ந்து தங்களின் மொபைல் போன்களில் விபத்து நடந்த காட்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்தனர். மக்களின் இந்தப் போக்குக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனமும் வேதனையும் தெரிவித்து வருகின்றனர். மொபைல் போனில் படம் பிடிக்கும் இந்த மோகம் மனிதாபிமானத்தையும் எச்சரிக்கை உணர்வையும் தொலைத்துவிட்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img