புது தில்லி:
தனது ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில் ஆப்கன் சென்ற பிரதமர் மோடி, திடீரென பாகிஸ்தானுக்கு பயணம் செய்தார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த போது, அவரது அழைப்பை ஏற்று திடீரென பயணம் மேற்கொண்ட பாரத பிரதமர் மோடியின் செயலை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மனிஷ் திவாரி, “இந்தச் சந்திப்பு திட்டமிடப்படாதது என்றால், அது முற்றிலும் முட்டாள்தனமான, அபத்தமான ஒன்று. இந்தியாவின் தேசப் பாதுகாப்பில் பிரதமர் தனது சாகச வேலைகளை காட்ட வேண்டாம். அத்தகைய சாகசத்தை நாட்டு மக்களுக்கு செய்து காட்டவே இந்த ‘திடீர்’ பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.


