நிலக்கல்லில் நிறுத்தப் பட்ட ஊடகத்தினர்! கேரள அரசு கெடுபிடி #சபரிமலை!

01 Oct17 dhin sabari malai e1539780766410 - 2026

பம்பா : சபரிமலைக்குச் செல்ல முயன்ற பத்திரிக்கையாளர்கள், ஊடகத்தினரை பம்பைக்கு 20 கி.மீ., தொலைவில் உள்ள நிலக்கல்லிலேயே நிறுத்தி வைத்தனர் போலீஸார்.

கார்த்திகை மாதப் பிறப்பு நாளை வருவதை ஒட்டியும் மண்டல பூஜைக்காகவும் நாளை சபரிமலை சந்நிதான நடை திறக்கப் படுகிறது. நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்ப ஸ்வாமி கோயிலின் நடை திறக்கப் படவுள்ள நிலையில், நிகழ்வுகள் குறித்து படம் பிடிக்க முன்னமேயே ஊடகத்தின் தயாராக வந்துள்ளனர்.

மண்டல பூஜை, மகர விளக்கு ஜோதி தரிசனம் எல்லாம் முடிந்து, நடை அடைக்கப் பட்ட பின்னர் தான் அடுத்த கட்ட விசாரணை என்று உச்ச நீதிமன்றம் அடம்பிடிக்கும் நிலையில், அதற்குள் எப்படியாவது இளம் பெண்களை சபரிமலையில் ஏற்றி தங்கள் வன்மத்தை வெளிப்படுத்த மாநில அரசு பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. அதற்காக, சபரிமலை சந்நிதானத்துக்கு ஹெலிகாப்டரிலேயே பெண்களை ஏற்றிச் செல்லும் யோசனையைக் கூட மாநில அரசு பரிசீலித்தது.

சபரிமலையைக் காப்போம் என பாஜக., நடைப்பயணம் செய்து வருகிறது. இதனால் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முற்போக்கு கேரளத்தையே தாம் விரும்புவதாகவும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்றும் கேரள முதல்வர் பிணரயி விஜயன் கூறியுள்ளதால், பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஐயப்பன் கோயில் நடை திறப்பில் இருந்து அங்கிருக்கும் அரசியல் சூழல் வரை படம் பிடிக்கவும் செய்தி சேகரிக்கவும், இன்றே பத்திரிக்கையாளர்கள் பம்பையை நோக்கிச் சென்றனர். ஆனால் அவர்கள் நிலக்கல்லிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories