கட்சி இதழில் நேரு, சோனியாவை விமர்சித்து கட்டுரை: கண்டண்ட் எடிட்டர் அதிரடி நீக்கம்

மும்பை:

காங்கிரஸ் கட்சியின் இதழான மும்பை காங்கிரஸ் தர்ஷன் இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் நேரு, சோனியாவை விமர்சித்து, பட்டேலை புகழ்ந்துள்ளதால் காங்கிரசார் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், அப்பத்திரிகையின் ஆசிரியர் சுதிர் ஜோஷி அதிரடியாக நீக்கப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியில் 131-வது தொடக்கநாள் நேற்று கொண்டாடப்பட்டது. கட்சியின் நாளிதழில் வெளியிடப்பட்டு உள்ள கட்டுரையில் சர்தார் பட்டேல் பராட்டப்பட்டு, முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் இப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சிக்கப்பட்டு உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மும்பை பிராந்தியத்தால் பிரசுரிக்கப்பட்டு உள்ள கட்டுரையில் காஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ஜவர்கலால் நேரு விமர்சிக்கப்பட்டு உள்ளார்.

கட்டுரையில் ஜவர்கலால் நேரு சர்வதேச விவகாரங்களில் சர்தார் வல்லபாய் படேலின் கருத்துக்களை கேட்டிருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 1997-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக சேர்ந்த சோனியா காந்தி 62 நாட்களில் கட்சியின் தலைவராக ஆகிவிட்டார், அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியிலும் தோல்வி அடைந்துவிட்டார் என்றும் மற்றொரு கட்டுரையில் விமர்சிக்கப்பட்டு உள்ளார்.

இம்மாத இதழில் வெளியாகிய கட்டுரையில் யார் எழுதியது என்பது குறுப்பிடப்படவில்லை. முன்னாள் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் நினைவு தினம் கடந்த டிசம்பர் 15-ம் தேதி அன்று அனுசரிக்கப்பட்டது. இதழில் அவருக்கு அஞ்சலி தெரிவிக்கப்பட்டு உள்ளது. பட்டேல் துணை பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி பதவிகளை வகித்தாலும், இரு தலைவர்கள் இடையிலான உறவானது

பலவீனமாகவே தொடர்ந்தது, இதனால் ராஜினாமா எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. பட்டேல் அவர்களின் தொலைநோக்கு பார்வையை நேரு அவர்கள் தழுவியிருந்தால், சர்வதேச விவகாரங்களில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து இருக்காது. கடந்த 1950-ம் ஆண்டு திபெத் விவகாரத்தில் சீனாவிற்கு எதிரான கொள்கையில் நேருவுக்கு பட்டேல் எழுதியதாக கூறப்படும் எச்சரிக்கை கடிதத்தை குறிப்பிட்டு ”பட்டேல் சீனாவை நம்பமுடியாத நாடு என்றும் இந்தியாவின் பிற்கால எதிரியாக இருக்கும் என்று விமர்சித்து இருந்தார்,” என்று கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீர், சீனா, திபெத் மற்று நேபாளம் ஆகிய விவகாரங்களில் ஜவகர்லால் நேரு, பட்டேல் பேச்சை கேட்டிருந்தால் பிரச்சனையானது இப்போதுவரையில் நீண்டிருக்காது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.விற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற நேருவின் நடவடிக்கைக்கு பட்டேல் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் என்றும் நேபாளம் விவகாரத்தில் நேரு, பட்டேல் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மும்பை பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவரும், காங்கிரஸ் கட்சி பத்திரிக்கையின் ஆசிரியருமான சஞ்சய் நிருபம், பத்திரிக்கையின் ஒவ்வொரு நாள் நடவடிக்கையிலும் தான் ஈடுபடுவது கிடையாது என்றும் இதுதொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என்றும், இது போன்று வந்தமைக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அந்த இதழின் கண்டண்ட் எடிட்டர் சுதிர் ஜோஷி அதிரடியாக நீக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories