அயோத்தியை விட்டுக் கொடுத்தால் காசி, மதுரா பிரச்னைகள் எழாது: தேசிய சிறுபான்மை ஆணைய தலைவர்

Published:

Syed Gayoorul Hasan Rizvi says build ram temple - 2026

புது தில்லி: தேசிய சிறுபான்மை ஆணைய தலைவர் கோயாருடல் ஹசன் ரிஸ்வி ஞாயிற்றுக்கிழமை, உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில், வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் வைத்து, நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணும்படி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில், இது இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால், முஸ்லிம்கள் பெரிய மனதுடன் நடந்து கொள்ளும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்த விவகாரத்தில் இரு தரப்பு சமாதானப் பேச்சுகளின் போது, அயோத்தி பிரச்னையில் முஸ்லிம்கள் இணங்கிச் சென்று விட்டுக் கொடுத்தால், காசி மதுரா உள்ளிட்ட மற்ற இடங்களில் உள்ள மசூதிகள் குறித்த பிரச்னைகள் வராமல் பார்த்துக் கொள்வோம் என்று உறுதி அளித்திருக்கிறார்.

அயோத்தி, மதுரா, காசி உள்ளிட்ட பெரும்பாலான இந்துக்களின் புனிதத் தலங்களை இடித்து விட்டு மொஹலாய ஆட்சியில் இஸ்லாமிய மன்னர்கள் மசூதிகளைக் கட்டியுள்ளனர். அந்த இடங்களில் எல்லாம் இந்துக்கள் தங்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img