சபரிமலையில் 144 தடை உத்தரவு ஏன்? விளக்கம் அளிக்க மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published:

kerala high court - 2026

சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியில் எதற்காக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது?

144 தடை உத்தரவு அமல் பற்றி விளக்கம் தர வேண்டும் என்று, கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இன்று காலை நீதிமன்றத்தில் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப் பட்ட போது, 144 தடை உத்தரவு என்பது, போராட்டக்காரர்களுக்கு என்று குறிப்பிடும் போது, சபரிமலை கோயிலில் பக்தர்கள், போராட்டக்காரர்கள் என்பதை எப்படி பிரித்துப் பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியது நீதிமன்றம்!

04 Sep25 kerala high court - 2026போலீஸ் அதிகாரிகள் சிலர் சட்டத்தைத் தம் கையில் எடுத்துக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், கூட்டம் கூடி சரண கோஷம் விளித்தலும், தங்குவதும் ஒரு கோயிலில் தவறு என்பதை எப்படிச் சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பியது.

மேலும், எதன் அடிப்படையில் சபரிமலை ஐயப்பன் கோயிலைச் சுற்றி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் இது தொடர்பாக இன்று மதியம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேரள ஏஜி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img