போலீஸ் நடவடிக்கை பக்தர்களை மிரட்டுவதாக உள்ளது! சபரிமலை விவகாரத்தில் கேரள அரசை விமர்சித்த உயர் நீதிமன்றம்!

Published:

sabarimala pinarayi vijayan - 2026

கொச்சி: சபரிமலையில் போலீசாரின் செயல்பாடுகள் பக்தர்களின் மனதில் பெரும் பயத்தை ஏற்படுத்தி இருப்பதாக நீதிமன்றம் கருதுவதாக உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்தது. மேலும் சபரிமலையில் 144 தடை உத்தரவு போடுவதற்கான காரணம் என்ன என்பது குறித்த விளக்கத்தை தர வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், ஐஜி விஜய் சஹாரே சபரிமலை நிலவரம் குறித்து ஓர் அறிக்கையை சமர்ப்பித்தார்! சபரிமலையில் 144 தடை உத்தரவு போடப்படுவதன் அவசியம் குறித்து அவர் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். மேலும், பக்தர்களை குறிவைத்து 144 தடை உத்தரவு போடப் படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் நீதிமன்றம் இதுகுறித்து கருத்து தெரிவித்த போது சபரிமலையில் உண்மையாக நடக்கும் நிகழ்வுகளுக்கும், இந்த அறிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருக்கிறது என்று தெரிவித்தது. சபரிமலை நம்பிக்கையாளர்கள் மீது போலீசார் அடக்குமுறையை ஏவி விடுகின்றனர் என்று கூறிய நீதிமன்றம் மும்பையில் இருந்து சபரிமலைக்கு வந்த பக்தர்கள் ஏன் சபரிமலை செல்லாமல் பாதி வழியிலேயே திரும்பினர் என்பது குறித்தும் விளக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது!

save sabarimala logo - 2026

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img