பதான்கோட் தாக்குதல்: மோடி விசாரிப்பு; பாதுகாப்பு அமைச்சர் தலைமையில்அவசரக் கூட்டம்

புது தில்லி: 

பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் இன்று அதிகாலையில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர் . பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் விமானப்படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்தியது பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உயர்மட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் தில்லியில் மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் நடந்தது . இதற்கிடையில், நடந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி விவரங்களை கேட்டறிந்தார்.
பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரித்துள்ளார்.

இந்திய எல்லையில் நுழைந்த பயங்கரவாதிகள், கடல் வழியாக வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது . போலீஸ் எஸ். பி., வாகனத்தை கடத்தி சென்று, அதுனை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலில் ஜெய்ஸ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது .

இந்தப் புத்தாண்டு தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தக்கூடும் என கடந்த சில நாட்களுக்கு முன் உளவுத்துறை எச்சரித்திருந்தது . அத்துடன் நேற்றும், பஞ்சாப் மாநில எல்லைக்குள் 4 முதல் 5 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்தது. இதனால் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் இருந்ததால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என விமானப்படை தள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு துறை தேசிய செயலர் அஜித் தோவல் , பாதுகாப்பு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories