ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டியில், வெற்றியின் விளிம்பில் இருக்கும் இந்திய அணியின் வெற்றிக்கு குறுக்கீடாக காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 151 ரன்களே எடுத்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 33 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.
பின்னர் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 37.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்திருந்தபோது போது தனது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சில் 292 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணையித்தது.
இந்நிலையில் 4ம் நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் இழந்துள்ள ஆஸி. அணி வெற்றிக்கு மேலும் 140 ரன் சேர்க்க வேண்டிய நிலையில், இன்று கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.