செம்மரக் கடத்தல் கும்பலுக்கும் ஆந்திர உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு!

சித்தூர்: செம்மரக் கடத்தல் கும்பலுக்கும் ஆந்திர உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாகத் தெரியவந்ததை அடுத்து, பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செம்மரக் கடத்தல் விவகாரத்தில் பிடிபட்ட தமிழக முன்னாள் எம்பி சவுந்தரராஜனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆந்திர மாநில உயர் போலீஸ் அதிகாரிகளுடன் செம்மரக் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஆந்திர மாநில வனப் பகுதிகளில் இருந்து செம்மரக் கட்டைகள் வெட்டப்பட்டு, வெளி நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. செம்மரக் கட்டைகள் அவ்வப்போது பிடிபடுவதும், குற்றவாளிகள் கைது செய்யப்படுவதும், அவர்கள் பின்னர் ஜாமீனில் வெளிவருவதும் தொடர்கதையாகத்தான் உள்ளது. இந்நிலையில் ஏப்..7ஆம் தேதி திருப்பதி வனப்பகுதியில் தமிழக கூலித்தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸார் என்கவுன்ட்டர் நடத்தி சுட்டுக் கொன்றனர். இதை அடுத்து, செம்மரக் கடத்தலில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகளைப் பிடிக்க ஆந்திர அரசு உத்தரவிட்டது. இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையினர் நடத்திய விசாரணையில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், தில்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும், வங்கதேசம், மியான்மர் நாடுகளிலும் இந்த செம்மரக் கடத்தலில் பலருக்கு தொடர்புள்ளது தெரியவந்தது. இதனிடையே ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள லட்சுமணன், சினிமா தயாரிப்பாளர் மஸ்தான் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் மொரீஷியஸ் நாட்டில் பதுங்கியிருந்த கெங்கிரெட்டி கைது செய்யப்பட்டார். இந்தக் கடத்தலில் தமிழக முன்னாள் எம்பி சவுந்தரராஜன், சரவணன், குமார் உட்பட பலரது தொடர்பு குறித்தும் தெரிய வந்ததையடுத்து ஆந்திர போலீசார் பூடானில் சீன எல்லையில் பச்சிமாபெங்கா என்ற இடத்தில் இருந்த முன்னாள் எம்பி சவுந்தரராஜனைக் கைது செய்து, அங்கு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 டன் செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர். அடுத்து, சென்னை செங்குன்றத்தில் பதுங்கியிருந்த சரவணன், குமார் ஆகிய 2 பேரைக் கைது செய்து, சவுந்தரராஜனின் குடோனில் இருந்து 5 டன் செம்மரங்களையும் கைப்பற்றினர். பூடானில் பிடிபட்ட சவுந்தரராஜன் பின்னர் சித்தூர் கொண்டு வரப்பட்டார். அதை அடுத்து, சவுந்தரராஜன் உட்பட சரவணன், குமார் ஆகிய 3 பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் இந்த விவகாரத்தில் ஆந்திர போலீஸ் உயர்அதிகாரிகளின் தொடர்பு குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கைது செய்யப்பட்ட சவுந்தரராஜனை மட்டும் சித்தூர் 3ஆவது கூடுதல் மாவட்ட முன்சீப் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதை அடுத்து, அவரை மே.7ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories