December 6, 2025, 7:25 AM
23.8 C
Chennai

மருமகள் வைத்த மட்டன் குழம்பு; மாமனார் மரணமடைந்த பரிதாபம்…..!

murder - 2025

மருமகள் சமைத்த ஆட்டுக்கறி குழம்பு சுவையாக இல்லை என்று கூறி தகராறில் ஈடுபட்ட தந்தையை மகன் சுவற்றில் முட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த வி கோட்டா மண்டல் பகுதியை சேந்தவர் செல்ல குருப்பா (65). கடந்த ஞாயிறன்று வீட்டில் ஆட்டுக்கறி சமைக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடுவதற்காக அமர்ந்துள்ளனர்.

அப்போது தனக்கு உணவு பிடிக்கவில்லை, ஆட்டுக்கறி சுவையாக இல்லை என்று கூறி குருப்பா தகராறில் செய்துள்ளார்.

மேலும் சாப்பாட்டு தட்டை, உணவு சமைத்த தனது மருமகள் மீது தூக்கி வீசியுள்ளார். இதில் அப்பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரம் குறையாமல் மருமகளை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால் கோபடைந்த அவரது மகன், தந்தை குருப்பாவை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் குருப்பா எந்தவித சமாதானத்திற்கும் கட்டுபடாமல் மீண்டும், மீண்டும் தகாத வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் தந்தை மகன் இருவருக்கும் கைகலப்பு வந்துள்ளது. இதையடுத்து குருப்பாவை மகன் சுவற்றி முட்டி தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து குருப்பா சுயநினைவிழந்து மயங்கி விழுந்து இறந்தார்.

இந்த குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த குருப்பாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலையில் தொடர்புடைய குடும்பத்தினர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய வி. கேட்டா மண்டல் எஸ்.ஐ ரவிபிரகாஷ் ரெட்டி,

குருப்பாவை அவரது மகன் தாக்கி கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், அந்த கொலையில் குடும்பத்தினர் அனைவருக்கும் தொடர்பு உள்ளது.

இதனால் சம்பவம் நடந்த போது உடனிருந்த அனைவரையும் கைது செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் அப்பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories