மருமகள் வைத்த மட்டன் குழம்பு; மாமனார் மரணமடைந்த பரிதாபம்…..!

murder - 2026

மருமகள் சமைத்த ஆட்டுக்கறி குழம்பு சுவையாக இல்லை என்று கூறி தகராறில் ஈடுபட்ட தந்தையை மகன் சுவற்றில் முட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த வி கோட்டா மண்டல் பகுதியை சேந்தவர் செல்ல குருப்பா (65). கடந்த ஞாயிறன்று வீட்டில் ஆட்டுக்கறி சமைக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடுவதற்காக அமர்ந்துள்ளனர்.

அப்போது தனக்கு உணவு பிடிக்கவில்லை, ஆட்டுக்கறி சுவையாக இல்லை என்று கூறி குருப்பா தகராறில் செய்துள்ளார்.

மேலும் சாப்பாட்டு தட்டை, உணவு சமைத்த தனது மருமகள் மீது தூக்கி வீசியுள்ளார். இதில் அப்பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரம் குறையாமல் மருமகளை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால் கோபடைந்த அவரது மகன், தந்தை குருப்பாவை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் குருப்பா எந்தவித சமாதானத்திற்கும் கட்டுபடாமல் மீண்டும், மீண்டும் தகாத வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் தந்தை மகன் இருவருக்கும் கைகலப்பு வந்துள்ளது. இதையடுத்து குருப்பாவை மகன் சுவற்றி முட்டி தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து குருப்பா சுயநினைவிழந்து மயங்கி விழுந்து இறந்தார்.

இந்த குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த குருப்பாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலையில் தொடர்புடைய குடும்பத்தினர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய வி. கேட்டா மண்டல் எஸ்.ஐ ரவிபிரகாஷ் ரெட்டி,

குருப்பாவை அவரது மகன் தாக்கி கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், அந்த கொலையில் குடும்பத்தினர் அனைவருக்கும் தொடர்பு உள்ளது.

இதனால் சம்பவம் நடந்த போது உடனிருந்த அனைவரையும் கைது செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் அப்பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories