February 22, 2026, 1:30 PM
29.6 C
Chennai

புர்ஹான் வானி பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி: ராஜ்நாத் சிங்

காஷ்மீரில் போலீசாரால் கொல்லப்பட்ட புர்ஹான் வானி பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதி ஆவான் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் காஷ்மீரில் நடைபெறும் வன்முறை பற்றிய விவாதத்திற்கு பதில் அளித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

காஷ்மீர் விவகாரத்தை பொறுத்த வரை கட்சி வேறுபாடுகளை மறந்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஏற்க்கனவே ஒரு ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார் நானும் காஷ்மீர் முதல்வர் மெஹபூபாவிடமும், ராணுவத் தளபதியுடனும் பேசியுள்ளேன். கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பொழுது குறைந்த அளவு பலப்பிரயோகம் செய்யுமாறு அவரிடம் அறிவுறுத்தியுள்ளேன். அதே போல் அபாயம் இல்லாத ஆயுதங்களை பயன்படுத்துமாறும் கூறியுள்ளேன்.

இதுவரை 566 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 1700 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் 200 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாதுகாப்பு படை வீரர்கள் 1740 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். பொதுமக்களில் 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இறந்து போன பாதுகாப்பபு படைவீரர்களின் மரணத்தை சிலர் கொண்டாடுகிகின்றனர். இது ஒரு மனிதத் தன்மையற்ற செயல். புர்ஹான் வாணி உள்ளிட்ட மூன்று தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீர் போலீசாரால் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள். அவர்களில் புர்ஹான் வானி தெற்கு காஷ்மீரின் ஹிஸ்புல் அமைப்பின் கமாண்டர். இளைஞர்கள் மத்தியில் மதப்பிரச்சாரம் செய்து வந்தவன். அவன் மீது கொலை உள்ளிட்ட 15 எப்.ஐ.,ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நானும் மெஹபூபாவும் தீவிரவாதம் தொடர்பாக பொதுமக்களுடன் எவ்வாறு பேச்சு வார்தையை தொடங்குவது என்பது பற்றி ஆலோசித்துள்ளோம். பாகிஸ்தானை பொறுத்த வரை மதத்தின் அடிப்படையில் உருவான ஒரு நாடு. தங்கள் நாட்டையே அதனால் பாதுகாக்க முடியவில்லை. அவர்கள் இந்திய முஸ்லீம்களை பற்றி பேசலாமா? இந்திய மக்களின் பாதுகாப்பை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories