பல ஆண்டுகள் உழைத்தவர்க்கும் கட்சி அங்கீகாரம் தர வேண்டும்: குஷ்பு நியமனத்தில் விஜயதாரணி

Published:

vijayadharani சென்னை : கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்தவர்களும், தியாகம் செய்தவர்களும் பலர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் கட்சி அங்கீகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., விஜயதாரணி. குஷ்பு, கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட விஷயத்தில் அவரின் கருத்து இதுவாக இருந்தது. தமிழக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. விஜயதாரணி செய்தியாளர்களிடம் பேசியபோது, காங்கிரஸ் மேலிடம் குஷ்புவுக்கு செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்ததில் ஆச்சரியமில்லை. கட்சிக்கு வருபவர்களை கௌரவிக்கவும், தக்க வைக்கவும் கட்சிப் பதவி வழங்குவது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் குஷ்புவுக்கு பதவி வழங்கியதில் தவறு இல்லை. அதே நேரம் சினிமா பிரபலங்களால்தான் காங்கிரசின் செல்வாக்கு வளரும் என்று கருதுவதும் தவறு. காங்கிரசுக்கு என்று தனி செல்வாக்கு உள்ளது. அதை யாராலும் மறுக்க முடியாது. இருக்கும் செல்வாக்கை தட்டி எழுப்பும் திறமை இருக்க வேண்டும். காங்கிரசுக்காக பல ஆண்டுகளாக உழைத்தவர்களும், தியாகம் செய்தவர்களும் பலர் இருக்கிறார்கள் அவர்களையும் கட்சி அங்கீகரிக்க வேண்டும். பதவிகள் வழங்க வேண்டும். உதாரணமாக நான் உள்பட பலருக்கு கட்சிப் பதவி கிடைக்கவில்லை என்பது வருத்தமான விஷயம்தான். எம்.எல்.ஏ. பதவி என்பது மக்களால் தேர்வு செய்யப்படும் பதவி. ஆனால் கட்சிப் பணி செய்வதற்காக எந்தப் பதவியும் வழங்கியதில்லை. தமிழகத்தில் காங்கிரசை முன்னணிக் கட்சியாக மீண்டும் கொண்டு வர முடியும். திறமை, உழைப்பு மீது நம்பிக்கையோடு செயல்பட்டால் மக்களின் ஆதரவைப் பெற முடியும்…. என்றார் அவர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img