தில்லி விமான நிலையத்தில் ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருள்! பாதுகாப்பு தீவிரம்!

dog - 2026

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருள் நிரப்பப்பட்ட மர்ம பை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் ஒரு மர்ம பை கிடப்பது நள்ளிரவு 1 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மர்ம பையை கைப்பற்றியதுடன் மோப்ப நாய் உதவியுடன் விமான நிலையம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.

மூன்றாவது முனையத்தில் இருந்து பயணிகள் வெளியேறும் பாதை மூடப்பட்டதுடன், அதன் வளாகத்தில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர்.

விமான நிலையத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பையில் சோதனையிட்டதில் அதில் ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

delhi airport - 2026

வெடிப்பொருள் உள்ள மர்ம பையை வெடிகுண்டு நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய அதிகாரிகள், வெடிபொருளின் சரியான தன்மையை ஆய்வு செய்து வருகிறோம்.

இந்த வெடிபொருள் அடுத்த 24 மணிநேரங்களுக்கு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது, அதன் பின்னரே அதைப் பற்றி ஏதேனும் உறுதியாகக் கூற முடியும். இது ஒரு வெடிகுண்டாகவோ அல்லது சக்திவாய்ந்த வெடிக்கும் சாதனமாக (IED) இருக்கலாம்,

ஆனால் தற்போது எதையும் சொல்வதற்கில்லை. இன்று அதிகாலை வெடிகுண்டுப் பை கண்டுபிடிக்கப்பட்ட அடுத்த இரண்டுமணிநேரம் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

விமான நிலைய வளாகத்தின் பாதுகாப்பை நாங்கள் அதிகரித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதை தில்லி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், வெடிப்பொருள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories