February 22, 2026, 4:27 AM
25.6 C
Chennai

5ம் வகுப்பு படிக்கிறான்; பேர் எழுதத் தெரியலியே! : உயர் நீதிமன்றம் வேதனை!

தமிழகத்தில் ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் தரம் மிக மோசமாக உள்ளதால், 5-ம் வகுப்பு மாணவர்களில் பலருக்கு தங்களது பெயரைக்கூட எழுதத் தெரியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் வேதனை தெரிவித்தார்.

திருச்சி எஸ்.வி.ஐ. கல்வியியல் கல்லூரி சென்னை உயர்நீதிமன்ற தாக்கல் செய்த மனுவில், ‘2007-ம் ஆண்டு 50 மாணவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதி பெற்று எங்கள் கல்லூரி தொடங்கப்பட்டது. பின்னர் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, கூடுதல் மாணவர்களை சேர்க்க அனுமதி கேட்டபோது, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தென்மண்டல இயக்குனர் அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் எந்திரத்தனமாக பி.எட், எம்.எட். படிப்புகளை நடத்துவதற்கு பல கல்வியியல் கல்லூரிகளுக்கு நாடு முழுவதும் அனுமதி வழங்கி வருவது உண்மை. இதனால் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள்கூட இல்லாமல், இதுபோன்ற கல்லூரிகள் நாடு முழுவதும் காளான்போல வளர்ந்து வருகின்றன.

இதில் மிகப்பெரிய கசப்பான உண்மை என்வென்றால், உள்கட்டமைப்பு வசதிகளே இல்லாத கல்லூரிகளுக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அங்கீகாரம் வழங்குவது குறித்து தமிழக அரசு எந்த கவலையும் கொள்வதில்லை. அதனால் தமிழகத்தில் ஆசிரியர்களின் தரம் மிகமோசமாக உள்ளது. 5-ம் வகுப்பு மாணவர்களில் பலருக்கு தங்களது பெயரைக்கூட எழுத தெரியவில்லை. முறையான வகுப்புகள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத ‘லெட்டர் பேட்’ கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். பட்டத்தை ஆசிரியர்கள் பெறுவதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

திறமையான, பண்பாற்றல் மிக்க ஆசிரியர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மிகக்குறைவாக உள்ளது. பாடத்தை தெளிவாக மாணவர்களுக்கு நடத்தக்கூடிய தகுதிகூட ஆசிரியர்களிடம் இல்லை. அதனால் பிற மாநில மாணவர்களுடன், தமிழக மாணவர்களால் கல்வியில் போட்டிபோட முடியவில்லை. கல்வி என்பது வணிக மயமாகிவிட்டது.

எனவே, பொதுநலன் கருதி இந்த வழக்கில் டெல்லியில் உள்ள தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் இயக்குனர், தமிழக உயர் கல்வித்துறை செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக பதிவாளர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் ஆகியோரை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறேன். அவர்கள் பின்வரும் கேள்விகளுக்கு விரிவான பதிலை மனுவாக தாக்கல் செய்யவேண்டும்.

நாடு முழுவதும் ஆசிரியர் பட்டய பயிற்சி, பி.எட்., எம்.எட்., ஆகிய படிப்புகளை நடத்தும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், கல்வியியல் கல்லூரிகள் எத்தனை உள்ளன? தமிழகத்தில் எத்தனை உள்ளன? கடந்த 10 ஆண்டுகளில் இந்த பள்ளிகள், கல்லூரிகளில் இருந்து எத்தனை மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர்? தமிழகத்தில் எத்தனை பேர் பட்டம் பெற்றுள்ளனர்?

இதில் எத்தனை பேர் ஆசிரியர் வேலை கிடைக்காமல் காத்துக்கிடக்கின்றனர்? இந்தியாவிலும், தமிழகத்திலும் இதுபோன்ற கல்லூரிகள், பள்ளிகளில் இருந்து ஆண்டுக்கு எத்தனை மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்? இந்தியாவிலும், தமிழகத்திலும் இந்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதா?

நாடு முழுவதும் எத்தனை ஆசிரியர்கள் தேவை என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஏதாவது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதா? ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளாமல், ஆசிரியர் பள்ளிகள், கல்வியியல் கல்லூரிகளை தொடங்க தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அனுமதி வழங்கி வருகிறதா? தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் மற்றும் தமிழக கல்வித்துறையில் போதுமான ஊழியர்கள், அதிகாரிகள் உள்ளனரா?

இந்தியாவிலும், தமிழகத்திலும் கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் எத்தனை இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளதா? இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் எத்தனை தேவை? தற்போது போதுமான எண்ணிக்கையில் உள்ளதா? இந்த கேள்விகளுக்கு 27-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories