5ம் வகுப்பு படிக்கிறான்; பேர் எழுதத் தெரியலியே! : உயர் நீதிமன்றம் வேதனை!

தமிழகத்தில் ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் தரம் மிக மோசமாக உள்ளதால், 5-ம் வகுப்பு மாணவர்களில் பலருக்கு தங்களது பெயரைக்கூட எழுதத் தெரியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் வேதனை தெரிவித்தார்.

திருச்சி எஸ்.வி.ஐ. கல்வியியல் கல்லூரி சென்னை உயர்நீதிமன்ற தாக்கல் செய்த மனுவில், ‘2007-ம் ஆண்டு 50 மாணவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதி பெற்று எங்கள் கல்லூரி தொடங்கப்பட்டது. பின்னர் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, கூடுதல் மாணவர்களை சேர்க்க அனுமதி கேட்டபோது, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தென்மண்டல இயக்குனர் அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் எந்திரத்தனமாக பி.எட், எம்.எட். படிப்புகளை நடத்துவதற்கு பல கல்வியியல் கல்லூரிகளுக்கு நாடு முழுவதும் அனுமதி வழங்கி வருவது உண்மை. இதனால் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள்கூட இல்லாமல், இதுபோன்ற கல்லூரிகள் நாடு முழுவதும் காளான்போல வளர்ந்து வருகின்றன.

இதில் மிகப்பெரிய கசப்பான உண்மை என்வென்றால், உள்கட்டமைப்பு வசதிகளே இல்லாத கல்லூரிகளுக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அங்கீகாரம் வழங்குவது குறித்து தமிழக அரசு எந்த கவலையும் கொள்வதில்லை. அதனால் தமிழகத்தில் ஆசிரியர்களின் தரம் மிகமோசமாக உள்ளது. 5-ம் வகுப்பு மாணவர்களில் பலருக்கு தங்களது பெயரைக்கூட எழுத தெரியவில்லை. முறையான வகுப்புகள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத ‘லெட்டர் பேட்’ கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். பட்டத்தை ஆசிரியர்கள் பெறுவதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

திறமையான, பண்பாற்றல் மிக்க ஆசிரியர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மிகக்குறைவாக உள்ளது. பாடத்தை தெளிவாக மாணவர்களுக்கு நடத்தக்கூடிய தகுதிகூட ஆசிரியர்களிடம் இல்லை. அதனால் பிற மாநில மாணவர்களுடன், தமிழக மாணவர்களால் கல்வியில் போட்டிபோட முடியவில்லை. கல்வி என்பது வணிக மயமாகிவிட்டது.

எனவே, பொதுநலன் கருதி இந்த வழக்கில் டெல்லியில் உள்ள தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் இயக்குனர், தமிழக உயர் கல்வித்துறை செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக பதிவாளர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் ஆகியோரை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறேன். அவர்கள் பின்வரும் கேள்விகளுக்கு விரிவான பதிலை மனுவாக தாக்கல் செய்யவேண்டும்.

நாடு முழுவதும் ஆசிரியர் பட்டய பயிற்சி, பி.எட்., எம்.எட்., ஆகிய படிப்புகளை நடத்தும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், கல்வியியல் கல்லூரிகள் எத்தனை உள்ளன? தமிழகத்தில் எத்தனை உள்ளன? கடந்த 10 ஆண்டுகளில் இந்த பள்ளிகள், கல்லூரிகளில் இருந்து எத்தனை மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர்? தமிழகத்தில் எத்தனை பேர் பட்டம் பெற்றுள்ளனர்?

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

இதில் எத்தனை பேர் ஆசிரியர் வேலை கிடைக்காமல் காத்துக்கிடக்கின்றனர்? இந்தியாவிலும், தமிழகத்திலும் இதுபோன்ற கல்லூரிகள், பள்ளிகளில் இருந்து ஆண்டுக்கு எத்தனை மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்? இந்தியாவிலும், தமிழகத்திலும் இந்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதா?

நாடு முழுவதும் எத்தனை ஆசிரியர்கள் தேவை என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஏதாவது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதா? ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளாமல், ஆசிரியர் பள்ளிகள், கல்வியியல் கல்லூரிகளை தொடங்க தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அனுமதி வழங்கி வருகிறதா? தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் மற்றும் தமிழக கல்வித்துறையில் போதுமான ஊழியர்கள், அதிகாரிகள் உள்ளனரா?

இந்தியாவிலும், தமிழகத்திலும் கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் எத்தனை இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளதா? இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் எத்தனை தேவை? தற்போது போதுமான எண்ணிக்கையில் உள்ளதா? இந்த கேள்விகளுக்கு 27-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories