அதிகாலை பாத்ரூம் போன பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

Published:

theft - 2026

சாத்தான்குளம் அருகே பெண்னை கட்டி போட்டு நகை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் விவசாயியான இவரது மனைவி பூபதி (55) இன்று 5ஆம்தேதி அதிகாலை பாத்ரூம் செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் அவரை பிடித்து கீழே தள்ளி அவரது கை கால்களை கட்டிப்போட்டு கழுத்தில் கிடந்த 3பவுன் தங்க சங்கிலி மற்றும் ஒரு ஜோடிகம்மல் கொலுசு ஆகியவற்றை பறித்து கொண்டு ஓடிவிட்டார் அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் கட்டை அவிழ்த்து விட்டுள்ளனர்.

இதுகுறித்து தட்டார்மடம் காவல்துறையில் பூபதி புகார் செய்தார். புகாரின் பேரில், தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். சாத்தான்குளம் டிஎஸ்பி பால்துரை சம்பவ இடத்தை பார்வையிட்டடார்.

பெண்னை கட்டி போட்டு நகை பறித்து சென்ற சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Related articles

Recent articles

spot_img