நீங்க என்ன சாதீ? செய்தியாளரிடம் கேட்டு அநாகரிகத்தை வெளிப்படுத்திய டாக்டர் கிருஷ்ணசாமி!

krishnasami interview - 2026

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று ஒரு பிரச்னையைக் கிளப்பினார். பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து நீங்க எந்த ஊரு எந்த சாதி என்றெல்லாம் கேட்டு அநாகரிகத்தை வெளிப்படுத்தியது கண்டு பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிமுக., கூட்டணியில் இடம்பெற்று தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் தனுஷ்குமாரிடம் தோல்வியைத் தழுவினார் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து அவர் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் `எனக்காக வாக்கு  சேகரித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், சரத்குமார், பிரேமலதா ஆகிய கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நன்றி. பியூஷ் கோயல் நேரடியாக வந்து தொகுதியில் எனக்காக பிரசாரம் செய்தார். தென்காசி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கும் நன்றி.

வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்கள் மனம் தளர்ந்துவிடக்கூடாது என பாமக., தேமுதிக., உள்ளிட்ட கட்சிகளுக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

தென்காசியில் நான் எதிர்ப்புகள் பலவற்றைச் சந்தித்தேன். ஆயினும், உயர் வகுப்பினர், முன்னேறிய சமூகத்தினர் எனக்கு வாக்களித்துள்ளனர். இதன் மூலம் தென்காசியில் ஒரு சமூக மாற்றம் நிகழ்ந்துள்ளது. பிராமணர்கள், முதலியார்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட சமூக மக்கள் தேர்தல் நேரத்தில் வரவேற்பு கொடுத்ததுடன்,  வாக்குகளையும் அளித்துள்ளனர். இது வரும் நாளில் சமூக மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

புதிய தமிழகம் கட்சி சார்பாக ஒராண்டில் அனைத்துக் கிராமங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்யவுள்ளேன். ஒரு புதிய சகாப்தத்தை 2021இல் புதிய தமிழகம் படைக்கும். இனி வரும் இரு ஆண்டுகளும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியை நிம்மதியாக ஆட்சி செய்யவிட வேண்டும்” என்று பேசினார்.

இதனிடையே, செய்தியாளர் ஒருவர், `தென்காசி மக்கள் புதிய தமிழகத்தைத் தொடர்ந்து புறக்கணிக்க காரணம் என்ன?’ என்று கேட்டார்.

அதற்கு கிருஷ்ணசாமி, `தோல்வியாக நீங்கள் பார்ப்பதை, நான் வெற்றியாகப் பார்க்கிறேன். பிரிந்து கிடந்த சமுதாய மக்களை ஒருங்கிணைக்கும் பணியை தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் செய்துள்ளேன். இது சமூக மாற்றம். அனைத்து சமுதாய மக்கள் இருக்கும் இடத்தில் எங்களால் வாக்கு கேட்க முடிந்தது என்றால், அது சமூகப் புரட்சிதான்.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

ஜல்லிக்கட்டு தொடங்கி கஜா புயல் வரையிலும் மோடி எதிராக செயல்படுகிறார் என ஒரு மாயைதான் இந்தக் கூட்டணியின் தோல்விக்குக் காரணம். தமிழக மக்கள் உணர்ச்சிக்கு இரையாகி இருக்கிறார்கள். அவர்கள்யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மோடி, எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட பிம்பமே தோல்விக்குக் காரணம். மோடி செய்த நல்லதை மக்கள் புரிந்துகொள்ளவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கொடுத்தாரே, அதற்கு ஏன் மக்கள் நன்றி செலுத்தவில்லை?”  என்று கேள்வி கேட்டார்.

இதனிடையே, ஏதோ வாக்குவாதம் ஏற்பட,  செய்தியாளர்கள் பலரும் ஒரே நேரத்தில் பேச அங்கே சலசலப்பு ஏற்பட்டது. இதனால் கடுப்பான கிருஷ்ணசாமி, திடீரென தன்னிடம் கேள்வி கேட்ட செய்தியாளரை ஒருமையில், `நீ எந்த ஊரு, எந்த சாதி… உன் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாது போயா’ என்றார்.

இதனால் செய்தியாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட, செய்தியாளர்கள் அங்கிருந்து வெளியேறினர். திடீரென செய்தியாளரைப் பார்த்து சாதி என்ன என்று கேட்டது செய்தியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

1 COMMENT

  1. டாக்டருக்கு இப்போது தேவை வைத்தியம். இன்னமும் ஜாதி என்ற காரணியை தன்னகத்தே வைத்துள்ளாரே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories