December 6, 2025, 11:03 AM
26.8 C
Chennai

அரிசி ஆலையில் ஆண்டுகணக்கில் வேலைபார்த்த கொத்தடிமைகளை அரசு அதிகாரிகள் மீட்பு; பொதுமக்கள் பாராட்டு….!

 

வேலூரில் கடந்த 4 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்த ஆந்திராவை சேர்ந்த 15 பேரை அரசு அதிகாரிகள் மீட்டனர்.

வேலூர் மாவட்டம் பொன்னை அருகே உள்ள மாதாண்டகுப்பம் கிராமத்தில் பசுபதி என்பவருக்கு சொந்தமான சாரதா ரைஸ் மில் செயல்பட்டு வருகிறது.

இங்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிலர் கொத்தடிமைகளா வேலை பார்ப்பதாக காட்பாடி வட்டாச்சியருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து காட்பாடி வட்டாச்சியர் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இதில் ஆந்திர மாநிலம் செதில்பாக்கத்தை சேர்ந்த சரவணன் குடும்பத்தினர் ஆறு பேரும், கேபிஆர் புரம் ராஜேந்திரன் குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரும், சுரேஷ் குடும்பத்தினர் மூன்று குடும்பத்தை சேர்ந்த 15 பேர் ரூ.50 ஆயிரத்துக்கு, கடந்த 4 ஆண்டுகளாக அங்கு கொத்தடிமைகளாக பணியாற்றி கொண்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை மீட்ட வட்டாச்சியர் கோட்டாட்சியரிடம் மெக்ராஜிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து மூன்று குடும்பங்களை சேர்நத 15 பேரும் ஆந்திர மாநிலத்தில் உள்ள அவர்களது சொந்த கிராமங்களுக்கு செல்ல அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் கொத்தடிமைகளை வைத்திருந்த அரிசி ஆலை அதிபர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கரும்பு ஆலை, சர்க்கரை ஆலை, அரிசி ஆலை இயங்கி வருகிறது.

இந்த ஆலைகளில் வறுமையின் காரணமாக கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாத ஏழை, எளிய மக்கள் இங்கு வருடகணக்கில் கொத்தடிமைகளாக பணியாற்றி வருகின்றனர்.

ஏதேனும் பகுதியில் இதேபோல் கொத்தடிமைகள் பணியாற்றுவது தெரிந்தால், உடனே சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும்படி அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இச்சம்பவத்தில் விரைவாக நடவடிக்கை எடுத்து கொத்தடிமைகளை மீட்ட அரசு அதிகாரிகளை பொது மக்கள் பாராட்டி வருகின்றனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories