அரிசி ஆலையில் ஆண்டுகணக்கில் வேலைபார்த்த கொத்தடிமைகளை அரசு அதிகாரிகள் மீட்பு; பொதுமக்கள் பாராட்டு….!

 

வேலூரில் கடந்த 4 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்த ஆந்திராவை சேர்ந்த 15 பேரை அரசு அதிகாரிகள் மீட்டனர்.

வேலூர் மாவட்டம் பொன்னை அருகே உள்ள மாதாண்டகுப்பம் கிராமத்தில் பசுபதி என்பவருக்கு சொந்தமான சாரதா ரைஸ் மில் செயல்பட்டு வருகிறது.

இங்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிலர் கொத்தடிமைகளா வேலை பார்ப்பதாக காட்பாடி வட்டாச்சியருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து காட்பாடி வட்டாச்சியர் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இதில் ஆந்திர மாநிலம் செதில்பாக்கத்தை சேர்ந்த சரவணன் குடும்பத்தினர் ஆறு பேரும், கேபிஆர் புரம் ராஜேந்திரன் குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரும், சுரேஷ் குடும்பத்தினர் மூன்று குடும்பத்தை சேர்ந்த 15 பேர் ரூ.50 ஆயிரத்துக்கு, கடந்த 4 ஆண்டுகளாக அங்கு கொத்தடிமைகளாக பணியாற்றி கொண்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை மீட்ட வட்டாச்சியர் கோட்டாட்சியரிடம் மெக்ராஜிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து மூன்று குடும்பங்களை சேர்நத 15 பேரும் ஆந்திர மாநிலத்தில் உள்ள அவர்களது சொந்த கிராமங்களுக்கு செல்ல அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

மேலும் கொத்தடிமைகளை வைத்திருந்த அரிசி ஆலை அதிபர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கரும்பு ஆலை, சர்க்கரை ஆலை, அரிசி ஆலை இயங்கி வருகிறது.

இந்த ஆலைகளில் வறுமையின் காரணமாக கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாத ஏழை, எளிய மக்கள் இங்கு வருடகணக்கில் கொத்தடிமைகளாக பணியாற்றி வருகின்றனர்.

ஏதேனும் பகுதியில் இதேபோல் கொத்தடிமைகள் பணியாற்றுவது தெரிந்தால், உடனே சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும்படி அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இச்சம்பவத்தில் விரைவாக நடவடிக்கை எடுத்து கொத்தடிமைகளை மீட்ட அரசு அதிகாரிகளை பொது மக்கள் பாராட்டி வருகின்றனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories