February 22, 2026, 4:03 PM
30.4 C
Chennai

அரிசி ஆலையில் ஆண்டுகணக்கில் வேலைபார்த்த கொத்தடிமைகளை அரசு அதிகாரிகள் மீட்பு; பொதுமக்கள் பாராட்டு….!

 

வேலூரில் கடந்த 4 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்த ஆந்திராவை சேர்ந்த 15 பேரை அரசு அதிகாரிகள் மீட்டனர்.

வேலூர் மாவட்டம் பொன்னை அருகே உள்ள மாதாண்டகுப்பம் கிராமத்தில் பசுபதி என்பவருக்கு சொந்தமான சாரதா ரைஸ் மில் செயல்பட்டு வருகிறது.

இங்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிலர் கொத்தடிமைகளா வேலை பார்ப்பதாக காட்பாடி வட்டாச்சியருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து காட்பாடி வட்டாச்சியர் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இதில் ஆந்திர மாநிலம் செதில்பாக்கத்தை சேர்ந்த சரவணன் குடும்பத்தினர் ஆறு பேரும், கேபிஆர் புரம் ராஜேந்திரன் குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரும், சுரேஷ் குடும்பத்தினர் மூன்று குடும்பத்தை சேர்ந்த 15 பேர் ரூ.50 ஆயிரத்துக்கு, கடந்த 4 ஆண்டுகளாக அங்கு கொத்தடிமைகளாக பணியாற்றி கொண்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை மீட்ட வட்டாச்சியர் கோட்டாட்சியரிடம் மெக்ராஜிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து மூன்று குடும்பங்களை சேர்நத 15 பேரும் ஆந்திர மாநிலத்தில் உள்ள அவர்களது சொந்த கிராமங்களுக்கு செல்ல அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் கொத்தடிமைகளை வைத்திருந்த அரிசி ஆலை அதிபர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கரும்பு ஆலை, சர்க்கரை ஆலை, அரிசி ஆலை இயங்கி வருகிறது.

இந்த ஆலைகளில் வறுமையின் காரணமாக கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாத ஏழை, எளிய மக்கள் இங்கு வருடகணக்கில் கொத்தடிமைகளாக பணியாற்றி வருகின்றனர்.

ஏதேனும் பகுதியில் இதேபோல் கொத்தடிமைகள் பணியாற்றுவது தெரிந்தால், உடனே சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும்படி அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இச்சம்பவத்தில் விரைவாக நடவடிக்கை எடுத்து கொத்தடிமைகளை மீட்ட அரசு அதிகாரிகளை பொது மக்கள் பாராட்டி வருகின்றனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories