டாக்டர் செய்த ஜிஹாத்! 8000 இந்து, பௌத்த பெண்களுக்கு பிள்ளைப்பேறு ‘கட்’!

Published:

srilanka doctor - 2026

இலங்கையில் ஒரு டாக்டர் புது வகை ஜிஹாத் செய்திருக்கிறார்: 8,000 ஹிந்து, பௌத்த பெண்மணிகளுக்கு அவர்கள் அனுமதியில்லாமலே கருத்தடை செய்திருக் கிறார். அவர் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இலங்கையில் அண்மைக்கால குண்டுவெடிப்பு தாக்குதல்களில் ஈடுபட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த டாக்டர் இவர். ஷேகு ஷியாபுதீன் மொஹம்மத் சாஃபி என்பதே இவர் பெயர்.

மருத்துவர்கள் இப்படிச் செய்வது புதிதில்லை. மும்பையில் இது ஏற்கனவே நடந்தது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் நடந்திருக்கிறது!

இந்நிலையில், தங்களுக்கு சந்ததி விரும்புவோர், இது போன்ற பயங்கரவாதப் பின்னணி கொண்ட மருத்துவர்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுகின்றனர் இலங்கையில்!

இதனிடையே, டாக்டர் சேகோ சிஹாபுதீன் முகமது சபி மீது 51 புகார்கள் வந்துள்ளதாக குருனேகலா மருத்துவமனை தெரிவித்துள்ளது. இவர் கடந்த மே மாதம் 24ம் தேதி கைது செய்யப்பட்டார். மருத்துவமனையின் இயக்குனர் சரத் வீர பண்டாரா தெரிவித்தபோது மே 27-ஆம் தேதி நேற்று வரை 46 புகார்கள் அவர் மீது அளிக்கப்பட்டிருந்தது என்றார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

மேலும் இன்றும் அதிகாரிகள் அவர் மீதான புகார்களை ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறியிருந்தார் இயக்குனர் வீரா பண்டாரா. இந்த விவகாரத்தில் நலவாழ்வு அமைச்சக அதிகாரிகள் மருத்துவமனைக்கு விசாரணைக்காக வந்து விசாரணைகளை மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக மொஹம்மது ஷபி மீது 15 புகார்களை போலீசார் பெற்றுள்ளனர். டாக்டர் உடன் பணிபுரிந்த மற்ற டாக்டர்களிடம் இருந்து மேலும் நான்கு புகார்கள் போலீசாரால் பெறப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் சிஐடி விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர். முன்னதாக இந்த மருத்துவரை போலீசார் கைது செய்து இருந்த போது 400 மில்லியன் ரூபாய் அளவுக்கு முறைகேடான வகையில் அவருக்கு சொத்து சேர்ந்தது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு அடிப்படைவாத பயங்கரவாதிகள் குழுக்களிடமிருந்து பெருமளவிலான பணம் வந்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது அவருக்கு 17 நில பேரங்கள் மற்றும் அவருக்குச் சொந்தமான நிலங்கள் போலீசாரால் முடக்கப்பட்டன!

The Lankan Jihadi doctor who led the forced sterilization of Buddhist & Hindu women during cesarean surgeries has been arrested & confessed to have performed sterilization of 8000 women without their knowledge. He owns properties worth 400 Million rupees, received from Arabs.

ALSO READ:  IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

https://twitter.com/DharmaMandalOrg/status/1132904834040881152

Related articles

Recent articles

spot_img