February 21, 2026, 11:39 AM
29.5 C
Chennai

கோயில் அர்ச்சகர் கண்ணில் மிளகாய்ப் பொடி அடித்து தாக்கிய பெண்கள்! காரணம்..?!

temple arthi - 2026

கோயில் அர்ச்சகர் கண்ணில் மிளகாய் பொடி போட்டு அடித்து தாக்கிய பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலயத்தில் பூஜைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த அர்ச்சகர் பவனின் கண்களில் காரப்பொடியைத் தூவிய பெண்கள், பின்னர் அவரை தாக்கியதுடன், அடிக்கவும் செய்தனர். மேற்கு கோதாவரி மாவட்டம் பீமவரத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்தது.

ஓர் ஆலய அர்ச்சகர் மீது பெண்கள் பலர் ஒன்றாக சேர்ந்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

பீமவரம் ஹெச்பி காலனியில் சாயிஸ்ரீசக்தி ஆலயத்தில் ‘கோட்ட’ பவன் அர்ச்சகராக பணியில் உள்ளார். பவனுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதுவே இந்தச் சம்பவத்துக்கு மூலகாரணமாக அமைந்திருக்கிறது.

ஆலய கமிட்டியைச் சேர்ந்த மோகன் ரெட்டிக்கும் பவனுக்கும் இடையே கடந்த சில நாட்களாக வாக்குவாதம் நடந்து வருகிறது. இதனிடையே ஞாயிறு அன்று மோகன் ரெட்டியின் மகள் தன் தந்தையைப் பார்ப்பதற்காக கோயிலுக்கு வந்தார். ஆனால் அந்த நேரத்தில் அர்ச்சகர் கோட்ட பவன் தன்னை தரக்குறைவாகப் பேசிவிட்டார் என்று அவர் குற்றம் சாட்டினார்.

அதனைக் கேட்ட மோகன் ரெட்டியின் உறவினர்களும் பெண்மணிகளும் பெரிய அளவில் திரண்டு, கோவிலுக்கு வந்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளில் இருந்த பவன் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவினர். பின்னர் அவரைப் போட்டு சரமாரியாக அடித்தனர். அவருடைய ஆடைகளைக் கிழித்தனர்.

அந்த நேரத்தில் பிற அர்ச்சகர்கள் குறுக்கே வந்து அந்த பெண்களிடமிருந்து பவனை காப்பாற்றினர். இந்தச் சம்பவம் குறித்து மோகன் ரெட்டியின் மகள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அர்ச்சகரும் தன்னைத் தாக்கியது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இருவரின் புகார்களையும் பதிவு செய்து கொண்ட போலீசார் கோவிலின் சிசிடிவி கேமரா காட்சிகளை பரிசீலித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories