கோயில் அர்ச்சகர் கண்ணில் மிளகாய்ப் பொடி அடித்து தாக்கிய பெண்கள்! காரணம்..?!

temple arthi - 2026

கோயில் அர்ச்சகர் கண்ணில் மிளகாய் பொடி போட்டு அடித்து தாக்கிய பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலயத்தில் பூஜைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த அர்ச்சகர் பவனின் கண்களில் காரப்பொடியைத் தூவிய பெண்கள், பின்னர் அவரை தாக்கியதுடன், அடிக்கவும் செய்தனர். மேற்கு கோதாவரி மாவட்டம் பீமவரத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்தது.

ஓர் ஆலய அர்ச்சகர் மீது பெண்கள் பலர் ஒன்றாக சேர்ந்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

பீமவரம் ஹெச்பி காலனியில் சாயிஸ்ரீசக்தி ஆலயத்தில் ‘கோட்ட’ பவன் அர்ச்சகராக பணியில் உள்ளார். பவனுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதுவே இந்தச் சம்பவத்துக்கு மூலகாரணமாக அமைந்திருக்கிறது.

ஆலய கமிட்டியைச் சேர்ந்த மோகன் ரெட்டிக்கும் பவனுக்கும் இடையே கடந்த சில நாட்களாக வாக்குவாதம் நடந்து வருகிறது. இதனிடையே ஞாயிறு அன்று மோகன் ரெட்டியின் மகள் தன் தந்தையைப் பார்ப்பதற்காக கோயிலுக்கு வந்தார். ஆனால் அந்த நேரத்தில் அர்ச்சகர் கோட்ட பவன் தன்னை தரக்குறைவாகப் பேசிவிட்டார் என்று அவர் குற்றம் சாட்டினார்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அதனைக் கேட்ட மோகன் ரெட்டியின் உறவினர்களும் பெண்மணிகளும் பெரிய அளவில் திரண்டு, கோவிலுக்கு வந்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளில் இருந்த பவன் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவினர். பின்னர் அவரைப் போட்டு சரமாரியாக அடித்தனர். அவருடைய ஆடைகளைக் கிழித்தனர்.

அந்த நேரத்தில் பிற அர்ச்சகர்கள் குறுக்கே வந்து அந்த பெண்களிடமிருந்து பவனை காப்பாற்றினர். இந்தச் சம்பவம் குறித்து மோகன் ரெட்டியின் மகள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அர்ச்சகரும் தன்னைத் தாக்கியது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இருவரின் புகார்களையும் பதிவு செய்து கொண்ட போலீசார் கோவிலின் சிசிடிவி கேமரா காட்சிகளை பரிசீலித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories