December 6, 2025, 11:05 AM
26.8 C
Chennai

தென்மாவட்டங்களில் முதல்முறையாக தென்காசியில்… கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம்!

tenkasi-sidha-corona-ward
tenkasi-sidha-corona-ward

தென் மாவட்டங்களில் முதன்முதலாக தென்காசியில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் முதன்முறையாக தென்காசியில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தென்காசி கொடிக்குறிச்சியில் உள்ள ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி வளாக கலையரங்கு இதற்காக தேர்வு செய்யப்பட்டு இதில் 3 பிரிவுகளில் 200 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை மையம் குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் உஷா, முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் கலா ஆகியோர் கூறியதாவது:-

தமிழக அரசின் உத்தரவின்படி சித்த மருத்துவ இயக்குனர் மற்றும் மாவட்ட இணை இயக்குனர் ஆகியோர் ஆலோசனையின் படியும் தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வழிகாட்டுதலின் பேரிலும் இந்த சித்த மருத்துவ சிகிச்சை மையம் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவி வருவதால் இந்த சிகிச்சை மையம் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு நோய் அறிகுறி ஏற்பட்டவர்கள் 55 வயதுக்கு மிகாமல் இருப்பவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு சித்த மருந்துகள் வழங்குவது மட்டுமல்லாமல் யோகா, தியானம், உடற்பயிற்சி போன்றவையும் கற்றுத்தரப்படும். உணவும் நாங்களே இலவசமாக அளிக்கிறோம். உணவு இங்கேயே தயார் செய்யப்படுகிறது

உளுந்து சாதம், அரிசி சாதம், முருங்கை சாம்பார், மிளகு ரசம், அவரைக்காய் பொரியல், இஞ்சி துவையல், ஐங்காய பொடி கலந்த மோர், சீரகத் தண்ணீர், நெல்லிக்காய் சாதம், காய்கறி கூட்டாஞ்சோறு, எலுமிச்சை இஞ்சி ரசம், பீன்ஸ் பொரியல், மணத்தக்காளி கீரை, கூட்டு புதினா சாதம் எள்ளு சாதம் மிளகு குழம்பு, தூதுவளை துவையல், கறிவேப்பிலை சாதம், சுண்டைக்காய் குழம்பு, கண்டந்திப்பிலி ரசம், கோவைக்காய் பொரியல், கொண்டை கடலை பருப்பு, கொத்தமல்லி சாதம், வாழைப்பூ பொரியல், பட்டாணி, சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து முடக்கத்தான் இலை வதக்கிய குழம்பு, அரைக்கீரை பொரியல், பீர்க்கங்காய் கூட்டு போன்ற உணவு வகைகள் ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றி வழங்கப்படும்.

tenkasi-sidha-corona-ward1
tenkasi-sidha-corona-ward1

நோய்தொற்று கண்டறியப்பட்ட நாளிலிருந்து 10-வது நாள் இந்த சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் மறு பரிசோதனை நடைபெறும். அதில் அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என கண்டறியப்பட்டால் 4 நாட்களுக்கு பிறகு அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.

வீட்டிலும் அவர்கள் 14 நாட்கள் இதுபோன்ற உணவு வகைகளை சாப்பிட்டு சித்த மருந்துகளை சாப்பிட்டால் நோய் பூரணமாக குணமடையும் என்று அவர்கள் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories