தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5,000ஐ கடந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5914 பேருக்கு சீன வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,02,815 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 6037 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதை அடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,44,675 என உயர்ந்துள்ளது..
தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 114 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 5041 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் 67,153 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் மேலும் 976 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப் பட்டது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்: