spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்மரணம் கூட பிரிக்கவில்லை: கணவரின் இறுதிச் சடங்கில் மயங்கி விழுந்து உயிரிழந்த மனைவி!

மரணம் கூட பிரிக்கவில்லை: கணவரின் இறுதிச் சடங்கில் மயங்கி விழுந்து உயிரிழந்த மனைவி!

- Advertisement -
dead body 1

கணவரின் இறுதிச்சடங்கின்போது கோடித்துணி போர்த்தியபோது துக்கம் தாங்காமல் மயங்கி விழுந்து மனைவியும் உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காசான்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சேதுமணியன்(வயது 94) இவரது மனைவி கமலம் (வயது 88). சேதுமணியன் கிராமத்தில் பெரிய நிலக்கிழாராக வசித்து வந்துள்ளார். இவருக்கு 6 மகள்கள் உள்ளனர்.

வயது முதிர்வு காரணமாக நேற்று சேதுமணியன் உயிரிழந்தார். இதனால் சேதுமணியின் குடும்பத்தினர் துயரத்தில் இருந்தனர். அதே நேரத்தில் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை சேதுமணியனை அடக்கம் செய்வதற்காக சடங்குகள் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது கோடித்துணி போர்த்திய போது கணவர் உடலை பார்த்து கதறி அழுது கொண்டிருந்த அவரின் மனைவி கமலம் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை தூக்கி நிறுத்திப்பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவத்தால் காசான்கோட்டை கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe