பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்து சாகசம்!

Published:

Parachute - 2026

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். 27 வயதான இவர் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பீர் கிராமத்தில் பாரா கிளைடிங் பைலட் பயிற்சி முடித்துள்ளார்.

இவர் ஏற்காட்டில் உள்ள ஜென்ட்ஸ் சீட் அருகில் உள்ள மலைப்பகுதியில் நேற்று காலை ஏற்காட்டில் இருந்து முதல் முறையாக பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்து சுமார், 40 நிமிடங்கள் வானில் பறந்தபடியே சாகசம் செய்தார்.

பின்னர் சாகசத்திற்கு பிறகு சேலத்தில் உள்ள குருவம்பட்டி உயிரியல் பூங்கா அருகில் உள்ள சிறிய வனப்பகுதியில் தரை இறங்கினார்.

அதற்கு பிறகு மதியம் ஏற்காடு வந்து மீண்டும் ஒருமுறை அதே இடத்தில் இருந்து வானில் பறந்து சேலத்தில் தரை இறங்கினார்.

இவருக்கு உதவியாக அவரது சக பைலட்களாகிய அபிலாஷ் மற்றும் சூரியகுமார் ஆகியோர் உடனிருந்தனர். இவர் இதற்கு முன் இந்தியா முழுவதும் உள்ள பல மலை பகுதிகளில் இருந்து 123 முறை இதுபோல் வானில் பறந்து சாகசம் செய்துள்ளார்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆனால் ஏற்காட்டில் இருந்து பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்து சாகசம் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

Related articles

Recent articles

spot_img