ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிக்கல்வித்துறை!

Published:

school 2 - 2026

தமிழகத்தில் பள்ளி கல்வி பாடப் புத்தகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பாடங்கள் முடிந்து அரையாண்டு விடுமுறை விடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய நிலையில், கொரோனா காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் 7 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3 பருவத் தேர்வுகளில் ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியே புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

தற்போது ஊரடங்கு காரணமாக மூன்றாம் பருவ பாட புத்தகங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது தாமதமாகியுள்ளது.

பெற்றோர்கள் அளித்த புகாரையடுத்து மூன்றாம் பருவ பாட புத்தகங்களை தாமதம் இன்றி மாணவர்களுக்கு உடனே வினியோகம் செய்ய வேண்டும்.

புத்தகங்களை வழங்கியதும் பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளனர்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Related articles

Recent articles

spot_img