மயங்கிய நாய்க்கு வாயோடு வாய் வைத்து மூச்சுக் கொடுத்து காப்பாற்றிய நபர்! வைரல்!

Published:

dog 1 - 2026

கலிபோர்னியாவில் பெண் ஒருவர், தனது நாயை பார்க் அழைத்து செல்கையில் திடீரென மயங்கி விழுந்துள்ளது.

அவ்வழியாக வந்த நபர் ஒருவர், சரியான நேரத்தில் முதலுதவி செய்து நாயை காப்பாற்றினார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை, ஸ்டோன் என அழைக்கப்படும் தனது பாக்சர் நாயை பெண் ஒருவர், தனது சைக்கிளில் கயிற்றால் கட்டியப்படி பார்க்கிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், பார்க் உள்ளே செல்வதற்கு முன்பே, 9 வயதாகும் அந்த நாய் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளது.

இதனைப் பார்த்த பெண் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். இதைப் பார்த்த ரே என்பவர், ஓடோடி வந்து நாயுக்கு சிபிஆர் முதலுதவியை செய்தார். ஆனால், நாய் பேச்சுமூச்சு இல்லாமல் இருந்ததால், உடனடியான நாயின் வாய் மீது வாய் வைத்து செயற்கை சுவாசத்தை கொடுத்துள்ளார்.

பின்னர், ஓரிரு நிமிடத்தில், ஸ்டோனிடம் அசைவு வந்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பலரும், அந்நபரை பாராட்டி வருகின்றனர்.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

இதையடுத்து, ஸ்டோனை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளனர். ஸ்டோனை பரிசோதித்த மருத்துவர், உடல்நிலை சீராக இருப்பதாகவும், திடீரென ஏற்பட்ட அதீத உற்சாகத்தால் மயங்கியிருக்கலாம் என்றார்.

வீடியோ வைரலான நிலையில், KOST 103.5 FM செனலுக்கு பேட்டியளித்த அந்நபர், நாய் மயங்கி விழுந்ததை பார்த்தும், எதுவும் யோசிக்காமல் அதனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டேன்.

அவசர நேரத்தில் சிபிஆர் செய்வது குறித்து யூடியூப்பில் கற்றுக்கொண்டேன். ஆனால், முதன்முறையாக சிபிஆர் செய்து உயிருக்கு போராடியவரை காப்பாற்றியுள்ளேன்’ என்றார்.

இந்த வீடியோவை பகிரும் பலர் பாராட்டுக்களை தெரிவித்தாலும், ஒரு சிலர் நாயை சைக்கிளில் கட்டி அழைத்து வந்த பெண்ணுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Related articles

Recent articles

spot_img