தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் போது கிடைத்த அம்மன் சிலை! மக்கள் பரவசம்!

amman 1 - 2026

நெல்லை தாமிரபரணி ஆற்றில் காலையில் குளிக்க வந்த பொதுமக்கள் அம்மன் சிலையை கண்டெடுத்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் தாமிரபரணி ஆற்றுப்படித்துறை அருகே திரிசூலி அம்மன் கோயில் உள்ளது.

அந்த பகுதியில் வண்ணார்பேட்டையைச் சேர்ந்த பொதுமக்கள் தினமும் குளிக்கச் செல்வது வழக்கம். இந்நிலையில் காலை அங்குள்ளவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் காலில் ஏதோ ஒன்று தட்டுபட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் ஆற்றில் மூழ்கி பார்த்த போது அம்மன் சிலை இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு திரண்ட பொதுமக்கள் ஆற்றில் இறங்கி சுமார் 3 அடி உயரம் கொண்ட அம்மன் சிலையை வெளியே எடுத்தனர்.

பின்னர் அதனை படித்துறை அருகே உள்ள திரிசூலி மாரியம்மன் கோயிலில் வைத்து மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். ஆற்றில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்ட தகவல் பரவியதும் வண்ணார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஏராளமானோர் கோயிலுக்கு வந்து அம்மன் சிலையை வழிபட்டனர்.

இதுகுறித்து கோயில் பூசாரி வண்ணார்பேட்டையைச் சேர்ந்த முருகன் என்பவர் கூறும்போது, கடந்த 8ம் தேதி திரிசூலி மாரியம்மன் கோயிலில் வருஷாபிசேகம் நடந்தது.

இதைத் தொடர்ந்து ஆற்றில் பொதுமக்கள் குளிக்கும் போது அம்மன் சிலையை கண்டெடுத்துள்ளனர். இது மாரியம்மன் சிலை ஆகும். பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டு வருகின்றனர் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories