March 27, 2025, 7:21 PM
28.9 C
Chennai

டி. ரெக்ஸ், ட்ரைசெராடாப்ஸுடன் சேர்ந்து வாழ்ந்த சாஃப்ட்ஷெல் ஆமை! புதிய கண்டுபிடிப்பு!

அழிந்து வரும் கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது ஆமைகள். அதனால் சில நாடுகளில் ஆமைகளை உண்பது தடை செய்யப்பட்டுள்ளது.

ஆமை நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம் . சில வகை ஆமைகள் அதிக நேரம் நிலத்தில்தான் வாழ்க்கின்றன. சில நீரில் . என்னதான் நீருக்குள் வட்டமிட்டு வந்தாலும் , தனது இனப்பெருக்கத்திற்கு ஆமை தேர்வு செய்யும் இடம் நிலம்தான் . அங்குதான் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றது ஆமைகள்.

ஆமைகளில் நிறைய வகைகள் இருப்பது நாம் அறிந்ததுதான். இந்த நிலையில் 66.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆமை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆமையானது சாஃப்ட்ஷெல் ஆமை இனத்தை சேர்ந்தது என்றும் இது டைனோசர்கள் அழிவதற்கு சற்று முன்பு அதாவது கிரெட்டேசியஸ் காலத்தின் முடிவில் வாழ்ந்த ஒன்று என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் டைனோசர்களோடு இந்த ஆமைகளும் வாழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இது சாஃப்ட்ஷெல் ஆமைகள் பற்றிய ஆழமான புரிதலையும், அதன் பண்புகளையும் அறிந்துக்கொள்ள உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. இதனை Hutchemys walkerorum என அழைக்கின்றனர்.

Hutchemys walkerorum என்பது பிளாஸ்டோமெனைன்கள் எனப்படும் ஒரு குறிப்பிட்ட குழுவில் உள்ள ட்ரையோனிசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஆமையாகும்.

இது பார்ப்பதற்கு சாஃப்ட்ஷெல் ஆமைகளைப் போலவே உள்ளது. ஆனால் சாதாரண சாஃப்ட்ஷெல் ஆமைகளை விடவும் வலுவானதாகவும் , பெரியதாகவும் இருக்கும். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட Hutchemys walkerorum தான் , சாஃப்ட் ஷெல் ஆமைகளின் முன்னோடி .

இந்த ஆமையின் புதைப்படிவ மாதிரி கடந்த 1975 ஆம் ஆண்டு ஒரு ட்ரைசெராடாப்ஸின் எச்சங்களுடன் கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அது கடந்த 2013 ஆம் ஆண்டு வரையில் எந்தவொரு ஆய்வுக்கும் உட்படுத்தாமல் இருந்தது.

ஏனெனில் இந்த ஆமையின் பரிணாம உறவுகளை நன்கு புரிந்துகொள்ள நேரம் தேவைப்பட்டது. மற்ற டிரையோனிக்கிட்கள் அல்லது சாஃப்ட்ஷெல் ஆமைகளுடன் இந்த மாதிரியை ஒப்பிட்டுதான் இந்த ஆய்வை முன்னெடுத்துள்ளனர்.

தற்போது இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியி பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இனி டைனோசர் வாழ்ந்த காலம் என்பதற்கு பதிலாக ஆமைகள் வாழ்ந்த காலம் என்றே சொல்லலாம்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!

இந்துக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க தமிழக அரசு துணை போவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

புதிய பாம்பன் பாலம் ஏப்.6ல் திறப்பு; வருகிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

பஞ்சாங்கம் மார்ச் 27 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: டி காக் அதிரடியில் கோல்கத்தா அணி வெற்றி!

          கொல்கொத்தா அணியின் மட்டையாளர், க்விண்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Topics

இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!

இந்துக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க தமிழக அரசு துணை போவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

புதிய பாம்பன் பாலம் ஏப்.6ல் திறப்பு; வருகிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

பஞ்சாங்கம் மார்ச் 27 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: டி காக் அதிரடியில் கோல்கத்தா அணி வெற்றி!

          கொல்கொத்தா அணியின் மட்டையாளர், க்விண்டன் டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

100 இந்துக் குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் நிம்மதியாக வாழ முடியும்; ஆனால்…

100 இந்துக் குடும்பங்களுக்கு இடையே முஸ்லிம்கள் வசிக்க முடியும் ஆனால், 100 முஸ்லிம்களுக்கு மத்தியில் 50 ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது,'' என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு ஏப்.2ல் தொடக்கம்!

கூட்டம் மிகுதியான நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து வெளியேறு: பாகிஸ்தானுக்கு இந்தியா கறார்!

Entertainment News

Popular Categories