December 20, 2025, 3:27 PM
28.6 C
Chennai

24 வயது பெண்ணிற்கு 22 குழந்தைகள்..😳!

babies - 2025

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 22 குழந்தைகள் உள்ளன. அத்தனை குழந்தையும் 2 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடையவை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இது எப்படி சாத்தியமானது, இத்தனை குழந்தைகளை அவர் எப்படி வளர்த்து வருகிறார்?

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஓஸ்டர்க். 24 வயதான இந்தப் பெண்ணுக்கு இப்போது 22 குழந்தைகள் உள்ளன. கிறிஸ்டினாவின் கணவர் பெயர் காலிப். இவர்கள் இருவரும் வாடகை தாய் சிகிச்சை முறையில் 22 குழந்தைகளை பெற்றுள்ளனர். இதற்காக அவர்கள் 195,000 டாலர்களை செலவு செய்துள்ளனர்.

கிறிஸ்டினாவின் இந்த சூப்பர் பெரிய குடும்பம் குறித்த பதிவு அண்மையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் வைரல் ஆனது. இவர்களுக்கு எப்படி இத்தனை குழந்தைகள் என்பதை நெட்டிசன்களால் புரிந்து கொள்ள இயலவில்லை.

கிறிஸ்டினாவின் 22 குழந்தைகள் மற்றும் காலிப், அவரது முன்னாள் மனைவி மூலமாக பெற்ற 6 வயது மகள் உள்பட தற்போது ஒரே வீட்டில் 23 குழந்தைகள் வசித்து வருகின்றன.

இதுகுறித்து கிறிஸ்டினா கூறுகையில், “நான் எப்போதும் குழந்தைகளுடனே இருக்கிறேன். ஒரு தாய் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், ஒரேயொரு வேறுபாடு என்ன என்றால், குழந்தைகளின் எண்ணிக்கை தான்.

ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக இருக்கும். வீட்டு வேலைகளை திட்டமிடுவது முதல் ஷாப்பிங் செல்ல நேரம் ஒதுக்குவது வரை எல்லாமே பரபரப்பாக இருக்கும்.

நான் சுருக்கமாக ஒரு விஷயத்தை குறிப்பிடுவது என்றால், எங்கள் வாழ்க்கையில் ஒரு நாள் கூட போர் அடிக்கவில்லை” என்று கூறுகிறார்.

கிறிஸ்டினாவின் பூர்வீகம் ரஷ்யா ஆகும். மிகப் பெரிய குடும்பம் வேண்டும் என்பதுதான் தனக்கும், தன்னுடைய கணவருக்கும் விருப்பம் என்று அவர் குறிப்பிடுகிறார்.

அதிக குழந்தைகள் வேண்டும் என்று சொன்னபோது, வாடகை தாய் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் அதுகுறித்து ஆச்சரியம் அடைந்ததாக தெரிவித்தார்.

ஆனால், இப்போது உள்ள குழந்தைகள் கிறிஸ்டினாவுக்கு போதாதாம். மொத்தம் 100 குழந்தைகள் வேண்டும் என்பது தான் அவரது கனவாம். அது நடந்தால், உலகின் மிகப் பெரிய குடும்பமாக இவரது குடும்பம் தான் இருக்கும்.

தற்போது கர்ப்பம் அடையும் நோக்கம் இருந்தாலும், குழந்தைகளை கவனித்துக் கொள்ள சிரமமாக இருக்கும் என்பதால் அதைத் தவிர்த்து வருவதாகவும், வெகு விரைவில் வாடகை தாய் அடிப்படையில் இன்னும் கூடுதலான குழந்தைகளை பெற்றெடுக்க இருப்பதாகவும் கூறுகிறார் கிறிஸ்டினா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அயோத்தி: நெடிய போராட்டத்தின் ஒரு வெற்றிச் சரித்திரம்!

ராமனுக்காக வாழ்நாளில் தொண்டு செய்த தமிழர்களில் பின்னாளில் தலையாய தொண்டு செய்தவர் ஆனார் மூத்த வழக்குரைஞர் பராசரன். ராமன் ஆலயம் அமைவதற்காகத் தன் தள்ளாத வயதிலும் உச்ச

தளும்பி வழியும் பிற்போக்குத் தனம்: தில்லி தற்கொலைத் தாக்குதல் பற்றிய கூரிய பார்வை!

அசௌகரியமாக இருந்தாலும் நேர்மையாக - பழி கூறுவது, மறுப்பது என்ற இரண்டு நிலைகளை தவிர்த்து விட்டு - சுய பரிசோதனை செய்யும் சமுதாயத்தினால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற பயங்கரவாத செயல்கள் நிகழாமல் தடுக்க முடியும்.

IND Vs SA T20: தொடரை வென்ற இந்திய அணி!

டி-20இல் 2000 ரன்கள் எடுத்தார். இந்த டி-20 ஆட்டத்தில் ஹார்திக் 17 பந்துகளில் 50 ரன் சாதனை புரிந்தார். ஆட்ட நாயகனாக் ஹார்திக் பாண்ட்யாவும் தொடர் நாயகனாக வருண் சக்ரவர்த்தியும் அறிவிக்கப்பட்டனர்.    

பஞ்சாங்கம் டிச.20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

Topics

அயோத்தி: நெடிய போராட்டத்தின் ஒரு வெற்றிச் சரித்திரம்!

ராமனுக்காக வாழ்நாளில் தொண்டு செய்த தமிழர்களில் பின்னாளில் தலையாய தொண்டு செய்தவர் ஆனார் மூத்த வழக்குரைஞர் பராசரன். ராமன் ஆலயம் அமைவதற்காகத் தன் தள்ளாத வயதிலும் உச்ச

தளும்பி வழியும் பிற்போக்குத் தனம்: தில்லி தற்கொலைத் தாக்குதல் பற்றிய கூரிய பார்வை!

அசௌகரியமாக இருந்தாலும் நேர்மையாக - பழி கூறுவது, மறுப்பது என்ற இரண்டு நிலைகளை தவிர்த்து விட்டு - சுய பரிசோதனை செய்யும் சமுதாயத்தினால் மட்டுமே மீண்டும் இதுபோன்ற பயங்கரவாத செயல்கள் நிகழாமல் தடுக்க முடியும்.

IND Vs SA T20: தொடரை வென்ற இந்திய அணி!

டி-20இல் 2000 ரன்கள் எடுத்தார். இந்த டி-20 ஆட்டத்தில் ஹார்திக் 17 பந்துகளில் 50 ரன் சாதனை புரிந்தார். ஆட்ட நாயகனாக் ஹார்திக் பாண்ட்யாவும் தொடர் நாயகனாக வருண் சக்ரவர்த்தியும் அறிவிக்கப்பட்டனர்.    

பஞ்சாங்கம் டிச.20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பரமன் அளித்த பகவத் கீதை!

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்

வாழ்க்கை என்பது எதைப் போன்றது தெரியுமா?

"வாழ்க்கை ஒரு கண்ணாடி போன்றது, நாம் அதை நோக்கிப் புன்னகைக்கும்போது சிறந்த பலன்களைப் பெறுகிறோம்."

தீபம் ஏற்ற வழியில்லை; விரக்தியில் உயிர்த் தியாகம் செய்த பூர்ணசந்திரன் இழப்புக்கு நீதி வேண்டும்!

பூரணசந்திரன் மரணத்திற்கு நீதிகேட்போம். முருகபக்தர்களே அணி திரண்டு வாரீர்: நெல்லை மாநகர் இந்து முன்னணி அழைப்பு!

ஹனுமத் ஜயந்தி; ஒரு லட்சம் வடை மாலையுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம்!

அனுமனின் அவதாரத் திருநாளான இன்று ஆஞ்சநேயரை தரிசிக்கவும் பிரசாதமாக வடையைப் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் பலர்  ஆலயத்தில் அதிகாலை முதலே குவிந்தனர்.

Entertainment News

Popular Categories