ஏப் 10முதல் சபரிமலை மற்றும் பம்பையில் வழிபாடு மற்றும் பிரசாத கட்டணம் அதிகரிப்பு..

Published:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து பூஜை கட்டணங்கள், அப்பம், அரவணை உள்பட பிரசாதங்களின் விலையை உயர்த்த தீர்மானிக்கப்பட்டு  உள்ளது. அதன்படி, படி பூஜை 22,900 ரூபாயும், களபாபிஷேகம் 15,900 ரூபாயும், சகஸ்ரகலசம் 11,250 ரூபாயும் உயர்த்தப்பட்டு உள்ளது.

சபரிமலை மற்றும் பம்பையில் வழிபாடு மற்றும் பிரசாத கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. படிபூஜை கட்டணம் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கட்டண உயர்வு ஏப் 10 சித்திரை விஷூவுக்காக நடை திறக்கும் நாள் முதல் அமலுக்கு வருகிறது.

புதிய கட்டண விபரம் வருமாறு: அடைப்புக்குறிக்குள் பழைய கட்டணம். அப்பம் ஒரு பாக்கெட் 45 (35), அரவணை 100 (80), கணபதிேஹாமம் 375 (300), பகவதி சேவை 2500 (2000), அஷ்டாபிேஷகம் 6000 (5000), களபாபிேஷகம் 38400 ( 22500), பஞ்சாமிர்த அபிேஷகம் 125, புஷ்பாபிேஷகம் 12500 (10000), அபிேஷக நெய் 100 மில்லி 100 (75), துலாபாரம் 625 (500), உஷபூஜை 1500 (1000), உச்சபூஜை 3000(2500). உதயாஸ்மனபூஜை 61800 (50000), உற்சவபலி 37500 (30000), படிபூஜை 1,37,000 (1,15,000), தினபூஜை 4000 (3000), வெள்ளி அங்கி சார்த்துதல் 6250 ( 5000), தங்க அங்கி சார்த்து 15000 (10000), நீராஞ்சனம் 125 (100), சோறு ஊட்டுதல் 300 (250), மஞ்சள்பறை 400 (300), நெல்பறை 200 (200). பம்பை: இருமுடிகட்டுதல் 300 (250), மோதகம் ( ஒரு பாக்கெட் ) 40 (35), வடைமாலை 250 (200).

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

இந்த கட்டண உயர்வு சித்திரை விஷு பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் ஏப்ரல் 10 முதல் அமலுக்கு வரும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்து  உள்ளது.

IMG 20220308 WA0004 1 - 2026
FB IMG 1648446003510 - 2026

Related articles

Recent articles

spot_img