யுஏஇ.,யில் பிச்சை எடுத்ததற்கு… 4 மாத சிறை! நாட்டில் இருந்தே வெளியேற்றம்!

Published:

prison lady begger - 2026

அரபு நாட்டில் பிச்சை எடுப்பது குற்றம். யாராவது பிச்சை எடுப்பதை போலீசார் பார்த்துவிட்டால் சிறைக்குச் செல்ல வேண்டியதுதான்.

அண்மையில் அரேபிய பெண் ஒருவர் பிச்சை எடுக்கும் போது ரோந்து பணியில் இருந்த பெண் போலீஸ் ஆபீஸர் பார்த்து விட்டார். ஆனால், அவளை விசாரித்த போலீஸ் அதிகாரியை தாக்கத் தொடங்கினாள் அந்தப் பிச்சைக்காரப் பெண்.

தற்போது இந்த வழக்கு ‘அஸ்மன்’ கிரிமினல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. பிச்சை எடுத்த பெண்ணை குற்றவாளியாக தீர்மானித்த நீதிமன்றம் அவளுக்கு 4 மாத சிறை தண்டனை விதித்தது. அதோடு தண்டனை காலம் முடிந்த பின் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது.

அஜ்மன் நகரில் ‘அல் நுயிமியா’ என்ற இடத்தில் பேட்ரோலிங் – ரோந்து பணியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரி, 54 வயது அரேபிய பெண் பிச்சை எடுப்பதை கண்டார். அதனால் ‘ஆன்ட்டி பெகிங் ட்ரைவ்’ என்ற போலீஸ் சட்டத்தின்படி பிச்சைக்காரியை அடையாள அட்டை காட்டும்படி போலீஸ் அதிகாரி கேட்டார்.

அவ்வளவுதான்… தன்னிடம் அது போன்ற அடையாள பத்திரங்கள் எதுவும் இல்லை என்றும் என்ன செய்வாயோ செய்து கொள் என்றும் எடுத்தெறிந்து பேசி உள்ளாள் பிச்சைக்காரி. விசாரித்த அதிகாரியை அடித்துத் தாக்கிவிட்டு பிச்சைக்காரி ஓடி விட்டாள்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

அதனால் போலீசார் அவரைத் தேடிப் பிடித்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். விசாரணையில் தான் போலீஸ் அதிகாரியை அடிக்கவே இல்லை என்று வாதிட்டாள் பிச்சைக்காரப் பெண்.

அதனால் போலீஸ் அதிகாரி தன் காயங்களுக்கான மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்ப்பித்தார். அதனால் கோர்ட் பிச்சைக்காரியை குற்றவாளியாக தீர்மானித்தது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img