February 22, 2026, 8:02 AM
26.1 C
Chennai

சிஸ்டம் சரியில்லை; தமிழகத்திலிருந்து தொடங்க வேண்டும்: ரஜினியின் பளிச் பார்வை

சென்னை:

நம் நாட்டில் சிஸ்டம் சரியில்லை, சிஸ்டம் கெட்டுப் போய் இருக்கு, சிஸ்டத்தை சரிசெய்தாகணும் என்று பேசிய நடிகர் ரஜினி காந்த், தனிக்கட்சி அரசியலில் ஈடுபடுவது குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளார். இந்நிலையில், போயஸ் கார்டனில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் சிஸ்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், சிஸ்டம் சரியில்லை. தமிழகத்தில் இருந்துதான் சிஸ்டத்தை சரி செய்யத் தொடங்கவேண்டும் என்று கூறினார்.

தமிழகத்தில்தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்வேன் என்று கூறினார் ரஜினி காந்த். முன்னதாக, ரசிகர் சந்திப்பின் போது, ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதை வெளிப்படையாக அறிவித்தார். கடந்த மே மாதமே, தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று தெரிவித்திருந்தார் ரஜினி.

கடந்த டிசம்பர் 31ஆம் தேதி ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தான் அரசியலில் ஈடுபடுவது உறுதி என்றும், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனிக்கட்சியாக போட்டியிடுவோம் என்றும், சட்டசபை தேர்தல் நேரத்தில் கட்சி துவங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

ரஜினி கட்சி தொடங்கியதும் விவசாயத்துக்கும், நதிநீர் இணைப்பு குறித்தும், தமிழக மீனவர்கள் பிரச்சினை நோக்கியும் அரசியல் நகர்வு இருக்கும் என்று கூறப் படுகிறது. நீர் நிலைகள் வரும் பாதையை முதலில் சரி செய்ய வேண்டும் என்பது ரஜினியின் பார்வை.

இந்நிலையில், போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தமிழகத்தில்தான் சிஸ்டம் சரியில்லை. தமிழகத்தில்தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும். கமலுடன் இணைந்து பணியாற்றுவது என்பது இப்போது தீர்மானிக்கப்படாதது. காலம் பதில் சொல்லும்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும். 2.0 படத்தில் கிராபிக்ஸ் பணிகள் முடியவில்லை. எனவே, காலாவா அல்லது 2.0வா என்பதில் எது முதலில் வெளியாகும் என்பது இன்னும் 2 நாட்களில் தெரியும் என்று கூறினார் ரஜினி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories