கொள்ளை அடிக்க போலீஸையே துணைக்கு அழைத்து வந்த ‘பலே’ ஆசாமி; ‘திரு திரு’ வென விழிக்கும் போலீஸ்

சென்னை:
கொள்ளை அடிக்கவும் நோட்டம் பார்க்கவும், போலீசாரையே நம்ப வைத்து துணைக்கு அழைத்து வந்த பலே ஆசாமி குறித்து இப்போது போலீஸார் வட்டத்தில் பரபரப்பாகப் பேசப் படுகிறது.

நேற்று ஜெ.தீபா வீட்டுக்கு வருமான வரி சோதனை என்று கூறிக் கொண்டு மித்தேஷ் குமார் என்பவர் வந்துள்ளார். அவருக்கும் தீபாவின் கணவர் மாதவனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மாம்பலம் உதவி ஆணையர் செல்வம் வந்து விசாரித்த போது, அந்த நபர் நைஸாக வீட்டின் சுவர் ஏறிக் குதித்து, தயாராக இருந்த ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியானது. மித்தேஷ்குமார் போலீஸ் பாதுகாப்புடன் அங்கே வந்ததுதான் ஆச்சரியமான தகவல்.

சனிக்கிழமை காலை 5.40 மணி அளவில் மாம்பலம் உதவி ஆணையர் செல்வத்தை இளைஞர் மித்தேஷ்குமார், 3 பேருடன் சென்று சந்தித்தாராம். அப்போது அவர், தாங்கள் தில்லியில் இருந்து வந்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும், தீபா வீட்டில் சோதனை நடத்த போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் கூறினாராம்.

இதை அடுத்து, ஒரு காரில் மித்தேஷ்குமார் மற்றும் 3 பேரும் வந்ததாகவும், அவர்களைப் பின்தொடர்ந்து உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் 4 காவலர்கள் தீபா வீட்டுக்கு பின்தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

இப்படி, தீபா வீட்டில் நோட்டம் விட போலீஸாரையே ஒரு இளைஞர் ஏமாற்றி அழைத்து வந்ததுள்ளார் என்பதும், தாங்கள் போலி என்று தெரியவந்தபோது, போலீஸாரின் பிடியில் சிக்காமல் தப்பிச் சென்றுள்ளார் என்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அசடு வழிந்துள்ள மாம்பலம் போலீஸார், தங்களின் உயர் அதிகாரிகளுக்கு இந்தச் சம்பவம் குறித்து பதில் சொல்ல வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

அண்மைக் காலமாக, தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சிப் பிரமுகர்கள், அரசியல்வாதிகள் குறித்து அடிக்கடி முறைகேடுப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால், வருமான வரி சோதனைகள் நடத்தப் பட்டு பரபரப்பு நிலவியது. இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு, வருமான வரி அதிகாரிகள் என்ற போர்வையில் ஒரு கும்பல் இது போன்ற முறைகேடுகளில் இறங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தால் போலீஸாரின் மானம் கப்பலேறியுள்ளது என்பதை விட, வருமான வரி சோதனை என்றால் என்ன நடைமுறைகளை காவல் துறையினர் பின்பற்ற வேண்டும் என்பதையும் தெளிவாக வகுத்துக் கொண்டால் இது போன்று ஏமாறும் சூழ்நிலைகள் போலீஸாருக்கு ஏற்படாது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories