அதிமுக.,வில் இருந்து நாட்டுப்புறப் பாடகி அனிதா குப்புசாமி விலகல்!

சென்னை :

தமிழ் ரசிகர்களிடம் புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகி அனிதா குப்புசாமி அதிமுக.,வில் இருந்து விலகியுள்ளார். நண்பர்கள், ரசிகர்கள் என பல தரப்பினரும் கேட்டுக் கொண்டதால், தாம் அதிமுக.,வில் இருந்து விலகியதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் வேறு எந்த அணியிலும் சேரும் முடிவில் இல்லை என்றும் கூறினார்.

தமிழ் ரசிகர்களிடம் புகழும் செல்வாக்கும் பெற்றவர்கள் நாட்டுப் புறப் பாடகரும் ஆய்வாளருமான புஷ்பவனம்  குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குப்புசாமி ஆகியோர். இருவரும் இணைந்து நாட்டுப் புறப் பாடல்களைப் பாடி, தமிழ் கிராமியக் கலைகளை உலக அளவில் கொண்டு சென்றுள்ளனர். பிரபல நாட்டுப் புறக் கலைஞரும், ஆய்வாளரும், பாடகருமான குப்புசாமியை அனிதா, காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

அனிதா குப்புசாமி நாட்டுப்புறப் பாடகி, சமையல் கலை வல்லுநர், ஆய்வாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். பீகார் மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தவராக இருந்தாலும் அவரது தமிழ் உச்சரிப்பும், தமிழ் மொழியில் கிராமியப் பாடல்களை அச்சுபிசகாமல் பாடுவதும் அவரை புகழடையச் செய்தது.

தமிழ் மேடைகளில் இருந்த செல்வாக்கை அரசியல் மட்டத்திலும் விரிவாக்கும் வகையில், கடந்த 2013ல் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக.,வில் இணைந்தார் அனிதா குப்புசாமி. அந்த நேரத்தில் அவர் ஜெயா டி.வி.யில் சமையல் கலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இப்போது ஜெயா டி.வி. அதிமுக.,வின் கட்டுப் பாட்டில் இல்லை.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து சிலர் ஒதுங்கியும், சிலர் வெளியேறியும் வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அனிதா குப்புசாமியும் அதிலிருந்து விலகியுள்ளார்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் இனியும் அதிமுகவில் தொடரப்போவதில்லை என்றார். வேறு அணியில் சேரும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும், ரசிகர்களும் நலம் விரும்பிகளும் கேட்டுக் கொண்டதால் அதிமுகவிலிருந்து விலகுவதாகவும் அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories