திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் 82.5 % வாக்குகள் பதிவானது. சில மையங்களில் மட்டும், வாக்காளர்கள் அதிகமாக இருந்ததால், 6 மணிக்கு மேலும் வாக்குப்போட அனுமதிக்கப்பட்டனர். வாக்குகள் பதிவான இயந்திரம் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் வரும் 16ம் தேதி எண்ணப்படுகின்றன. மொத்தமுள்ள 322 மையங்களில், மொத்தம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 60 வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆண்கள், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 976 பேர் வாக்கு அளித்துள்ளனர். பெண்கள், ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 77 பேர் வாக்கு அளித்துள்ளனர். திருநங்கைகள் 7 பேர் வாக்கு அளித்துள்ளனர்.
To Read this news article in other Bharathiya Languages
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் 82.5% வாக்குகள் பதிவு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari