ராகுல் வெளிநாடு பயணம்-காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி..

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று ஐரோப்பாவுக்கு புறப்பட்டு சென்றார். வருகிற 17-ந்தேதி அவர் நாடு திரும்புகிறார் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் நிலவும் அரசியல் மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே ராகுல்காந்தி வெளிநாடு சென்றிருப்பதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் அவர் ஓட்டு போட திரும்பி வருவார் என்றும், பாராளுமன்ற கூட்டத் தொடரில் அவர் பங்கேற்பார் என்றும் கட்சி நிர்வாகிகள் கூறி உள்ளனர். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மேலும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற உள்ள “பாரத் ஜோடோ யாத்திரை” தொடர்பாகவும் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. மேலும் கோவாவில் 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மாயமாகி திரும்பிய விவகாரத்தில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

இந்த பிரச்சினைகளுக்கிடையே ராகுல்காந்தி வெளிநாடு சென்றிருப்பதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கட்சியை எப்படி வளர்ப்பது என்றும் அவர்கள் முணுமுணுக்கிறார்கள்.

கட்சியில் பிரச்சினைகள் இருக்கும் போது ராகுல் காந்தி வெளிநாடுகளுக்கு பயணம் செய்ததை இதுவரை பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே விமர்சித்து வந்தன. ஆனால் தற்போது சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனாலும் அவர் எதற்கும் கவலைப்படாமல் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் அவர் கடந்த மே மாதம் நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இரவு விடுதியில் பொழுதை போக்கியது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.

5 மாநில தேர்தலின் போது மற்ற கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலிக்கு சென்ற ராகுல்காந்தி கடந்த ஜனவரி மாதம் தான் நாடு திரும்பினார். மேலும் கடந்த மே மாதம் மேல்சபை தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அணி மாறி ஓட்டு போட்ட பிரச்சினை இருந்த நிலையில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்-க்கு ராகுல்காந்தி பயணம் மேற்கொண்டார்.

இப்படி காங்கிரஸ் கட்சியில் முக்கிய விவகாரங்கள், பிரச்சினைகள் இருக்கும் போதெல்லாம் அவர் வெளிநாடு செல்வது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

images 77 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories