கர்நாடகத்தில் கபினி அணை, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது.

images 20 1 - 2026

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகத்தில் கபினி அணை, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது. இதனால் இந்த இரு அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்த நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து சேர்ந்தது. வெள்ளப்பெருக்கால் அருவிகள் அனைத்தும் நீரில் மூழ்கியது. தற்போது இரு மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பருவமழையின் தீவிரம் சற்று குறைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளுக்கு வரும் உபரி நீரின் திறப்பு அளவு குறைக்கப்பட்டுள்ளது.

images 9 1 - 2026

இந்த நிலையில் இன்றுகாலை 8 மணி நிலவரப்படி கர்நாடகத்தில் உள்ள கபினி அணையிலிருந்து 34,875 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 46,518 கன அடியுமாக மொத்தம் 81 ஆயிரத்து 393 கன அடி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் 4 வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக வந்துகொண்டிருக்கிறது. நீர்வரத்து குறைந்துள்ளதால் வெள்ளப்பெருக்கின்போது நீரில் மூழ்கியிருந்த ஐவர்பாணி, சினிஅருவி உள்ளிட்டவை தற்போது வெளியே தெரிகின்றன. காவிரி ஆற்றின் இருகரையும் தொட்டப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்கவும், மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை 5-வது நாளாக நீட்டிக்கப்பட்டது. பிரதான அருவி செல்லும் நடைபாதை, மாமரத்துக்கடவு பரிசல் துறை, முதலை பண்ணை, ஆலம்பாடி உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதியில் ஒகேனக்கல் போலீசார், வருவாய்த்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரோந்துப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகளை பென்னாகரம் மடம் சோதனைச்சாவடி, ஆலம்பாடி சோதனை சாவடிகளில் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். பிலிகுண்டுலுவில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

IMG 20220714 WA0048 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

Topics

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

Entertainment News

Popular Categories