இன்று ஆடி முதல்நாள் விடுமுறை தினம் சபரிமலை நடைதிறப்பு என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக அதிகளவில் இருந்தது. அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ளது. தினமும் சாரல் மழை விட்டு விட்டு பெய்கிறது. குளிர்ந்த காற்று வேகமாக வீசுகிறது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று முன்தினம் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் குவிந்தனர் இந்த நிலையில் நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததால் இந்த 2 அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. நேற்றும் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். இதுதவிர இன்று ஆடி முதல்நாள் சபரிமலை நடைதிறப்பு விடுமுறை நாள் மற்றும் கேரள மாநிலம் அருகில் இருப்பதால் அங்கிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்திருந்தனர். உற்சாக குளியல் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். ஆரியங்காவு பாலருவி அச்சன்கோயில் கும்பாருட்டி மணலாறு அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது.
குமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகக்குளியல் போட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் அதிக அளவில் வருகை தரும் சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவிக்கு இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு வாகனங்களில் வருகை தந்தனர். இவர்கள் ஆசை தீர அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதேபோன்று அருவியின் அருகிலுள்ள சிறுவர் பூங்க, அலங்கார நீரூற்று, பச்சைபசேல் புல்வெளி தோட்டம் ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். அருவியில்குளித்தும் நீச்சல் குளத்தில்நீந்தியும்பொழுது போக்கினர்.
அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் அப்பகுதியில் குளுகுளு சீசன் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். மேலும், இன்று ஆடி மாதம் பிறப்பு என்பதால் அருவியின் அருகிலுள்ள திற்பரப்பு மகாதேவர் ஆலயத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகாமாக இருந்தது. திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அடிக்கடி இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.






