ILA4323

மேற்கு வங்க ஆளுநராக இல.கணேசன் பதவியேற்பு..

மணிப்பூா் ஆளுநராக உள்ள இல. கணேசன், கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்க ஆளுநராக திங்கள்கிழமை மாலை பதவியேற்றுக் கொண்டாா்.

மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கரை குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக பாஜக சனிக்கிழமை அறிவித்ததையடுத்து, அவா் ராஜிநாமா செய்திருந்தாா்.

இதையடுத்து, மேற்கு வங்க மாநில ஆளுநா் பொறுப்பும் கூடுதலாக மணிப்பூா் ஆளுநரான இல.கணேசனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருக்கு கொல்கத்தா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, மேற்கு வங்க பேரவைத் தலைவா் பிமன் பானா்ஜி, மாநில அமைச்சா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

மணிப்பூா் ஆளுநா் இல.கணேசனுக்கு மேற்குவங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘மணிப்பூா் ஆளுநா் இல.கணேசன், கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்க ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. அவரின் பணி சிறக்க தமிழக பாஜக சாா்பாக மனமாா்ந்த வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளாா்.

ILA4323

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.