
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மின்சார வேலியில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதிவுதவி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ராஜம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சடகோபன் என்பவர் தனது வாழைத் தோட்டத்தை அடிக்கடி காட்டு பன்றிகள் சேதப்படுவதால் வாழைத் தோட்டத்தைச் சுற்றிலும் மின்சார வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு
இச்சம்பவம் குறித்து தகவலறிந்தது வந்த பிரம்மதேசம் காவல்துறையினர் உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து பிரம்மதேசம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த மூவர்குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ளார். மின்கம்பியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர் என்ற துயர செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் எனவும் 3 பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதிவுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.




