குமரியில் தங்கிய ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த வர்கள் யார்? தீவிர விசாரணை..

Tamil News large 3175915 1 - 2026

கன்னியாகுமரியில் 4 நாட்கள் தங்கிய ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த நபர்கள்-பெண்கள் யார்?: உளவுத்துறை விசாரணை மங்களூரூ போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகம் மற்றும் கேரளாவுக்கு ஷாரிக் கடந்த செப்டம்பர் மாதம் வந்து சென்றிருப்பது தெரிய வந்தது. தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் குற்ற சம்பவங்களை நடத்த ஷாரிக் சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கர்நாடகா மாநிலம் மங்களூரூ நாகுரி பகுதியில் கடந்த 18-ந் தேதி ஆட்டோவில் குண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்டுத்தியது. ஆட்டோவில் வெடித்தது குக்கர் வெடிகுண்டு என போலீசார் விசாரணையில் தகவல் கிடைத்தது. குண்டு வெடித்ததில் ஆட்டோவில் வந்த ஒருவரும், டிரைவரும் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோவில் காயத்துடன் மீட்கப்பட்டவன் தான் குக்கர் குண்டு கொண்டு வந்தவன் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவனைப் பற்றி விசாரித்ததில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஷாரிக் என்ற முகமது ஷாரிக் ( 22) என்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவனது செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அவன் தனது அடையாளத்தை மறைத்து செல்போனில் பிரேம்ராஜ் என்ற பெயரில் சிவன் ‘ஸ்டேட்டஸ்’ வைத்து பலருடன் பழகி உள்ளான்.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஷாரிக் யார்? யாருடன் பேசி உள்ளான் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது பல பெண்களுடன் அவன் பேசியிருப்பது தெரிய வந்தது. நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பேசியது குறித்து தகவல் கிடைத்ததும், அந்தப் பெண்ணை குமரி மாவட்ட போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர். ஆனால் அது தவறுதலாக வந்த அழைப்பு என தெரிய வந்தது. அந்தப் பெண் மொழி தெரியாததால், தனது ‘பாஸ்ட் புட்’ கடையில் வேலை பார்த்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜிம் ரகுமான் என்பவரை வைத்து போனில் பேசியதாக தெரிவித்தார். எனவே அஜிம் ரகுமானுக்கு, ஷாரிக்குடன் தொடர்பு இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

நாகர்கோவில் கோட்டாரில் தங்கியிருந்த அஜிம் ரகுமானை நள்ளிரவில் பிடித்த போலீசார், ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். சுமார் 30 மணி நேரம் அவனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவனுக்கும் ஷாரிக்குக்கும் தொடர்பு இல்லை என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 30 மணி நேர விசாரணைக்கு பிறகு அஜிம் ரகுமானை போலீசார் விடுவித்தனர். இதற்கிடையில் மங்களூரூ போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகம் மற்றும் கேரளாவுக்கு ஷாரிக் கடந்த செப்டம்பர் மாதம் வந்து சென்றிருப்பது தெரிய வந்தது. ஏற்கனவே கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருப்பதால், அதற்கும் ஷாரிக்குக்கும் தொடர்பு இருக்கலாமா? அவன் தமிழகத்திலும் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட சதி திட்டம் தீட்டினானா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories