மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் களை கட்டியது

2023 96932725 - 2026


தமிழர்களின் வசந்த விழா தை பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களில், இன்று மாட்டுப் பொங்கல் நன்றி தெரிவிக்கும் நாளாக அனுசரிக்கப்படுகிறது. வேளாண்மையின் அடிப்படையாக இருக்கும் விலங்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் பாரம்பரியம் இன்று.

பொங்கல் கொண்டாட்டம் சீரும் சிறப்புமாக நேற்று கொண்டாடப்பட்ட பிறகு, இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் மூன்றாம் நாளான இன்று, பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனப்படும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய கால்நடைகள் குறிப்பாக உழவுக்கும் உணவுக்கும் அடிப்படையான காளைகளுக்கும், பசு மாட்டிற்கும் நன்றி தெரிவிப்பதற்காக கொண்டாடப்படும் திருநாள் இதுவாகும்.

தைப்பொங்கல் திருநாளில் பொங்கல் வைத்து சூரிய பகவான் உள்ளிட்ட இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட அடுத்த நாளான இன்று, கிராமங்களில் மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இன்று, பல கோவில்களில் கோ பூஜை வழி நடத்தி வழிபாடு நடத்தப்படுகிறது.

images 87 1 - 2026

மாட்டுப்பொங்கல் நாளில் நடைபெறும் கோ பூஜைகளில் கலந்து கொள்வது மகாலட்சுமியின் அருளை பெற்று தரும். மாடு வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் இந்த நாளில் பூஜைகளை செய்வது வழக்கம். 

மாடுகளை சிறப்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே பொங்கல் திருநாளோடு சேர்த்து மாட்டுப் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. மாடுகளை வைத்திருப்பவர்கள், மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை குளிக்க வைத்து, சலங்கை கட்டி, குங்கும பொட்டு வைத்து, அதன் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து, தெய்வமாக நினைத்து பூஜை செய்கின்றனர்.

மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து கோலமிட்டு, பொங்கலை மாட்டிற்கு ஊட்டி மாட்டுப்பொங்கலை கொண்டாடுகிறார்கள். மாடு இல்லாதவர்கள் இந்த நாளில் முன்னோர்களை வழிபடுகினிறனர்.

உழவுக்கு உயிரூட்டும் காளைகளையும், உழவுப் பொருட்களையும் இந்நாளில் அலங்கரித்து, வழிபடுவது தமிழர்களின் பாரம்பரிய மரபாக இருந்து வருகிறது. அறுவடைத் திருநாளாம் பொங்கல் பண்டிகையின்போது, உழவுக்காக பயன்படுத்திய உபகரணங்களையும் சுத்தம் செய்து அவற்றையும் பராமரிக்கும் நாள் இது.

மாட்டுப்பொங்கல் தினத்தன்று, மாடுகளுக்கு புது கயிறுகளை மாட்டி, கொம்புகளை சீவி புது வர்ணம் பூசி, சந்தனம், குங்குமத்தால் பொட்டு வைத்து, மாலை அணிவித்து அவற்றை தெய்வமாக நினைத்து வழிபடுவது மரபு.பொங்கல் வைப்பவர்கள் பொங்கல் பொங்கிய பிறகு, கால்நடைகளுக்கு தீபாரதணைக் காட்டி, அவற்றுக்கு பொங்கல், பழத்தைக் கொடுப்பார்கள். இன்று, காலை 07.30 – 09.00 மற்றும் காலை 10.30 – 12.00  மணி வரை மாட்டுப் பொங்கலுக்கு பொங்கல் வைக்கலாம். 

images 84 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories