சென்னை: சிலுவையில் அறைந்து கொண்ட செயல் என்னை ஆழ்ந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்று கராத்தே வீரர் ஹுசைனிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கராத்தே வீரர் ஹூசைனிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் நான் மீண்டும் முதலமைச்சர் ஆவதற்காக, நீங்கள் உங்களை வருத்திக்கொண்டு சிலுவையில் அறைந்து கொண்ட செயல், என்னை ஆழ்ந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உங்களுடைய ஆதரவை எதிர்பார்த்தாலும், எல்லையை மீறி இதுபோன்று உங்களை வருத்திக்கொள்வதை தவிர்க்க வேண்டும். என்னிடம் காட்டிய கருத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய வாழ்க்கைக்கு அபாயகரமான நடவடிக்கைக்கைக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

