புது தில்லி: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரேணுகா சவுத்ரியின் அலட்சியத்தால், ‘ஏர் இந்தியா’ விமானம் 45 நிமிடம் கால தாமதமாகப் புறப்பட்டது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு ஏர் இந்தியா உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா மாநில காங்கிரஸ் எம்.பி., ரேணுகா சவுத்ரி, தில்லியிலிருந்து ஐதராபாத் செல்வதற்காக, ஏர் இந்தியா விமானத்தில் முன்பதிவு செய்திருந்தார். நேற்று இரவு 7:00 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம், ரேணுகா சவுத்ரி வராததால் புறப்படத் தாமதமானது. விமான நிலைய அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் அவர் பெயரைச் சொல்லி பல முறை அழைத்தும் அவர் வரவில்லை. வெகுநேரம் இவ்வாறு காத்திருந்ததால், விமானத்தில் பயணம் செய்ய அமர்ந்திருந்த பயணிகள் எரிச்சல் அடைந்தனர். இந்த விமானத்தில் மத்திய அமைச்சர் ஒருவரும், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரும் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து, ஏர் இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்த போது, ரேணுகா சவுத்ரி ஏற்கெனவே விமான நிலையத்துக்கு வந்துவிட்டார். அவரின் உடைமைகளும் விமானத்தில் ஏற்றப்பட்டுவிட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவர் வெளியே ஷாப்பிங் செய்யச் சென்றுவிட்டார். அவரின் உடைமைகள் ஏற்கெனவே ஏற்றப்பட்டு விட்டதால், வேறுவழியின்றி, ரேணுகா சவுத்ரி வரும் வரை விமானத்தை இயக்க முடியாமல் போனது. இதனால், விமானம் புறப்படுவதில் 45 நிமிட கால தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது என்றார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரேணுகா சவுத்ரி மறுத்துள்ளார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

