அதிமுக ஓபிஎஸ் வழக்கு பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுப்பு..

739528 chnneiahghcourt - 2026

சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. மீது வழக்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என ஓ.பி.எஸ் தரப்பு இன்று வாதம் செய்து கட்சியில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது எந்த நோட்டீசும் அளிக்காமல் கட்சியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி உள்ளனர். இடைக்கால பொதுச்செயலாளர் நியமனம் கட்சி விதிகளுக்கு புறம்பானது. என ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்து பொதுக்குழு முடிவுக்கு தடை விதிக்க கோரிய நிலையில் எதிர் தரப்பினரிடம் விளக்கம் கேட்காமல் தடை விதிக்க மறுத்து விசாரணை வரும் 17ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று தொடங்கியது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கூறுகையில், கட்சியில் இருந்து நீக்கி, கட்சி கட்டமைப்பை மாற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டுள்ளன. பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் செயல்பட தடை விதிக்க வேண்டும். கட்சியில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது; எந்த நோட்டீசும் அளிக்காமல் கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர்.

கட்சியை விட்டு நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.

பொதுக்குழுவை கூட்டியதை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக நீக்கத்தை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. கட்சி நிறுவனரின் கொள்கைக்கு விரோதமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக சட்டமன்ற கூட்டத்தொடரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக பங்கேற்க இயலாத நிலை உள்ளது. பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும். எதிர்தரப்பு வாதங்களை கேட்காமல் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

அ.தி.மு.க. விதிப்படி, கட்சி கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம், பொதுக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவர தீர்மானம் நிறைவேற்றியது சட்டவிரோதமானது. கட்சி அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை தலைமை விரும்பியதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை. இடைக்கால பொதுச்செயலாளர் நியமனம் கட்சி விதிகளுக்கு புறம்பானது. இவ்வாறு ஓ.பி.எஸ். தரப்பில் வாதம் நடைபெற்று வருகிறது.

எதிர்மனுதாரர்கள் தரப்பின் விளக்கத்தை கேட்காமல் எப்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.பின்னர் தடை விதிக்க மறுத்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்து பதிலளிக்க கோரி விசாரணையை வரும் மார்ச் 17க்கு ஒத்தி வைத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories