December 8, 2025, 10:02 AM
25.3 C
Chennai

காலமானார்: மதுரை கோயில் தக்கார் தொழிலதிபர் கருமுத்து கண்ணன்!

IMG 20230523 WA0015 - 2025
#Karumuthu Kannan

ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்காரும்
தியாகராசர் பொறியியல் கல்லூரியின் இயக்குநரும். கலைத் தந்தை கருமுத்து தியாகராஜர் செட்டியாரின் அன்புமகனுமான கருமுத்து கண்ணன் இன்று 23.05.2023 இன்று காலை காலமானார். அவரது உடலுக்கு ஏராளமானோ மலர் மாலை சூட்டி மரியாதை செய்து வருகின்றனர்

அவரது இறுதிச் சடங்குகள் நாளை மதியம் 2 மணியளவில் கோச்சடையில் நடைபெறும் என்று குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டிய பேராளுமைகள் வரிசையில் கருமுத்து கண்ணனும் ஒருவர் !

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் தக்கார், மீனாட்சி மில்ஸ் இயக்குநர் எனப் பன்முகத்தன்மை கொண்ட கருமுத்து கண்ணன் இயற்கை எய்தினார் எனும் செய்தி இன்று காலை வெளியானதும் பிரபலங்கள் பலரும் அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தனர்

70 வயதான கருமுத்து கண்ணன், கருமுத்து தியாகராசர் என அழைக்கப்பட்ட கருமுத்து தியாகராஜ செட்டியாரின் மகன்.

சிவகங்கையில் பிறந்த கருமுத்து தியாகராசர் அவர்களின் குடும்பத்தினர் இலங்கையில் துணி வணிகம் செய்தவர்கள்.

1925 ம் ஆண்டில் தமிழ்நாட்டின் மதுரையில் மீனாட்சி நூற்பாலையைத் தொடங்கியவர் தியாகராசர். மேலும் பல ஊர்களில் நூற்பாலைகளை அமைத்தவர்.

தொல்காப்பியத்தின் ஆங்கில நூற்பதிப்பு உள்ளிட்ட பல தமிழின் தலைசிறந்த நூல்கள் வெளிவர நிதி உதவி செய்தவர் தியாகராசர் .

கல்வித் தந்தை என அழைக்கப்பட்ட இவர் தொடங்கியதுதான் மதுரை தியாகராஜர் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகள், கல்விச் சாலைகள்.

ஆங்கிலத்தில் நல்ல புலமை என்ற போதும் ஆங்கிலம் கலக்காத தனித்தமிழில் பேசுவதை வழக்கமாகக் கொண்டவர் தியாகராசர்.

தன் மனைவிக்கு கல்வி கற்க ஊக்கப்படுத்தி அவரை ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதும் அளவு உயர்த்தியவர்.

14 ஜவுளி ஆலைகள், 19 கல்வி நிலையங்கள், மதுரை வங்கி, மதுரை காப்பீடு நிறுவனம் ஆகியவற்றை நிறுவியவர். கலைத்தந்தை, வள்ளல், தொழில் மேதை என்றெல்லாம் போற்றப்பட்டவர் கருமுத்து தியாகராஜ செட்டியார்.

இலங்கையில் தமிழர்கள் என்று அடையாளம் காண உடலில் சூடு போட்டுத் தளும்பு அடையாளம் ஏற்படுத்தும் கொடிய முறை இருந்தது. அதை நிறுத்தச் செய்தவர் தியாகராசர்.

தமிழ்நாடு எனும் பெயரில் பல ஆண்டுகள் நாளிதழ் நடத்தியவர் தியாகராசர். அவரது திருமகனாரான கருமுத்து கண்ணன் தன் தந்தையார் விட்டு சென்ற பணிகளை குறைவின்றி கவனித்து வந்தார் மதுரை கோயில் தக்காராக பொறுப்புணர்வுடன் சிறப்பாக நம் ஆளுமையை வெளிப்படுத்தி வந்தார். வறுமை நிலையில் இருக்கும் பலருக்கு நிதி உதவிகள் தாராளமாக செய்தவர். சமூக முன்னேற்றத்திற்காக பல வகைகளிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் கருமுத்து கண்ணன். அன்னாரது மறைவுக்கு நம் தளத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories