காலமானார்: மதுரை கோயில் தக்கார் தொழிலதிபர் கருமுத்து கண்ணன்!

IMG 20230523 WA0015 - 2026
#Karumuthu Kannan

ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்காரும்
தியாகராசர் பொறியியல் கல்லூரியின் இயக்குநரும். கலைத் தந்தை கருமுத்து தியாகராஜர் செட்டியாரின் அன்புமகனுமான கருமுத்து கண்ணன் இன்று 23.05.2023 இன்று காலை காலமானார். அவரது உடலுக்கு ஏராளமானோ மலர் மாலை சூட்டி மரியாதை செய்து வருகின்றனர்

அவரது இறுதிச் சடங்குகள் நாளை மதியம் 2 மணியளவில் கோச்சடையில் நடைபெறும் என்று குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டிய பேராளுமைகள் வரிசையில் கருமுத்து கண்ணனும் ஒருவர் !

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் தக்கார், மீனாட்சி மில்ஸ் இயக்குநர் எனப் பன்முகத்தன்மை கொண்ட கருமுத்து கண்ணன் இயற்கை எய்தினார் எனும் செய்தி இன்று காலை வெளியானதும் பிரபலங்கள் பலரும் அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தனர்

70 வயதான கருமுத்து கண்ணன், கருமுத்து தியாகராசர் என அழைக்கப்பட்ட கருமுத்து தியாகராஜ செட்டியாரின் மகன்.

சிவகங்கையில் பிறந்த கருமுத்து தியாகராசர் அவர்களின் குடும்பத்தினர் இலங்கையில் துணி வணிகம் செய்தவர்கள்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

1925 ம் ஆண்டில் தமிழ்நாட்டின் மதுரையில் மீனாட்சி நூற்பாலையைத் தொடங்கியவர் தியாகராசர். மேலும் பல ஊர்களில் நூற்பாலைகளை அமைத்தவர்.

தொல்காப்பியத்தின் ஆங்கில நூற்பதிப்பு உள்ளிட்ட பல தமிழின் தலைசிறந்த நூல்கள் வெளிவர நிதி உதவி செய்தவர் தியாகராசர் .

கல்வித் தந்தை என அழைக்கப்பட்ட இவர் தொடங்கியதுதான் மதுரை தியாகராஜர் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகள், கல்விச் சாலைகள்.

ஆங்கிலத்தில் நல்ல புலமை என்ற போதும் ஆங்கிலம் கலக்காத தனித்தமிழில் பேசுவதை வழக்கமாகக் கொண்டவர் தியாகராசர்.

தன் மனைவிக்கு கல்வி கற்க ஊக்கப்படுத்தி அவரை ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதும் அளவு உயர்த்தியவர்.

14 ஜவுளி ஆலைகள், 19 கல்வி நிலையங்கள், மதுரை வங்கி, மதுரை காப்பீடு நிறுவனம் ஆகியவற்றை நிறுவியவர். கலைத்தந்தை, வள்ளல், தொழில் மேதை என்றெல்லாம் போற்றப்பட்டவர் கருமுத்து தியாகராஜ செட்டியார்.

இலங்கையில் தமிழர்கள் என்று அடையாளம் காண உடலில் சூடு போட்டுத் தளும்பு அடையாளம் ஏற்படுத்தும் கொடிய முறை இருந்தது. அதை நிறுத்தச் செய்தவர் தியாகராசர்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

தமிழ்நாடு எனும் பெயரில் பல ஆண்டுகள் நாளிதழ் நடத்தியவர் தியாகராசர். அவரது திருமகனாரான கருமுத்து கண்ணன் தன் தந்தையார் விட்டு சென்ற பணிகளை குறைவின்றி கவனித்து வந்தார் மதுரை கோயில் தக்காராக பொறுப்புணர்வுடன் சிறப்பாக நம் ஆளுமையை வெளிப்படுத்தி வந்தார். வறுமை நிலையில் இருக்கும் பலருக்கு நிதி உதவிகள் தாராளமாக செய்தவர். சமூக முன்னேற்றத்திற்காக பல வகைகளிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் கருமுத்து கண்ணன். அன்னாரது மறைவுக்கு நம் தளத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories