மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவது மத்திய மாநில அரசின் கடமை: ஜி.கே.வாசன்

GK_Vasan சென்னை: மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை என்று குறிப்பிட்டுள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உடனடியாக இவற்றை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல ஆண்டுகளாக பல கோரிக்கைகளை அறிவித்து, அரசாணையாக வெளியிடப்பட்டு நடைமுறைப் படுத்தாமல் இருக்கின்றன. மேலும் அவர்களது புதிய கோரிக்கைகளையும் அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை. இந்தக் கோரிக்கைகள் ஐ.நா. சபையால் நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பிரகடணத்தை உள்ளடக்கிய, 1995 ஆம் ஆண்டு இந்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கிய பி.டபிள்யூ.டி சட்டத்தில் ஏற்றுக் கொண்டு தமிழக சட்ட சபையிலும், பல துறையின் செயலாளர் ஆணைகளிலும் இடம் பெற்றுள்ள அரசாணைகளை நிறைவேற்றாமல் இருப்பதை நிறைவேற்ற வேண்டும். அதாவது, மாற்றுத்திறனாளிகள் சட்டத்தில் வரையறுத்துள்ளபடி 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டிய மாநில ஒருங்கிணைப்பு குழு 4 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இதனை முறையாக அமைத்து செயல்படுத்த வேண்டும். 2009 ஆம் ஆண்டில் இலவசக் கல்விச் சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. அதில் மாற்றுத்திறனாளிகளுடைய குழந்தைகளை உள்ளடக்காமல் அமல்படுத்தியுள்ளதை மாற்றியமைத்து அவர்களையும் உள்ளடக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் செய்வதற்கு தனி வங்கி வசதியும், வீடு கட்டி ஒதுக்கும் போது வெளி ஒதுக்கீடாக 3 சதவீதம் வழங்கவும், பேருந்தில் ஒரே மாதிரியான இலவசக் கட்டணம் வழங்கவும், தனியார் துறையில் வேலை வாய்ப்பிற்கு முன்னுரிமை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கென்று தனி வாரியம் அமைத்தும், ரூ. 1 கோடி ஒதுக்கியும் கடந்த 2 ஆண்டுகள் முழுவதும் நடைமுறைப்படுத்தாமல் உள்ளது. அதனையும் முறைப்படுத்த வேண்டும். அவர்களுக்கென்று வடிவமைக்கப்பட்ட வண்டிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க ஆர்டிஓ அலுவலகத்தில் பரிசோதித்து பின்பு ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும். அவர்களுக்கு கல்வியிலும், கல்விக் கடனிலும் தனிச் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பிடபிள்யூடி சட்டத்தின் படி அவர்களுக்கு திருமணத் திட்டங்கள் அமைய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் குறித்த தேசிய அளவிலான கொள்கைகள், திட்டங்கள், சட்டங்களை நிறைவேற்ற, முன்பு செயலில் இருந்த ஒருங்கிணைப்புக் குழு, மாநில செயல்பாட்டுக் குழு ஆகியவற்றையும், நல வாரியத்தையும் செயல்பட வைக்க வேண்டும். இனி வரும் காலங்களில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு, சம பங்கேற்பு அளிக்க செயல்திட்டங்கள் கொண்டுவரப்பட்டு, நடைமுறைப்படுத்த வேண்டியது மாநில, மத்திய அரசாங்கத்தின் கடமை. என்று அவர் அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories